tamilnadu

‘அரசு முழு சம்பளம் வழங்க வேண்டும்’

போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கை

திருநெல்வேலி,  ஜூன் 19- நெல்லை மண்டலம் போக்குவரத்து(சிஐடியு) தாமிரபரணி கிளையின் 24  வது ஆண்டு பேரவை  நெல்லை மாவட்டம் மார்க்சி ஸ்ட் கட்சி மாவட்டக் குழு  அலுவலகத்தில் “மக்கள் போ ராளி” தோழர் அசோக் நினைவு அரங்கத்தில் நடை பெற்றது. சரவணமுத்து தலைமை வகித்தார்.  மத்திய சங்கத்தின் தலை வர் டி.காமராஜ் துவக்கி வைத்து பேசினார். வேலை அறிக்கையை கிளை செய லாளர் ஜோன்ஸ் சமர்ப்பித் தார். வரவு-செலவு அறிக் கையை பொருளாளர் காசி ராஜன் சமர்ப்பித்தார். கிளை யின் புதிய தலைவராக காசி ராஜன், புதிய செயலாளராக சரவணமுத்து, புதிய பொரு ளாளராக காளிதாஸ் மற்றும் 3 துணைத் தலைவர்கள், 3 துணைச் செயலாளர்கள் மற்றும் 17 பேர் கொண்ட குழு தேர்ந்தெடுக்கப்பட்டது.  அரசு அறிவித்தபடி 60  சதவீத பயணிகளை கொண்டு பேருந்து இயக்க வேண்டும், அனைத்து போக்குவரத்து தொழிலா ளர்களுக்கும் தினசரி பணி யின்போது சானிடைசர், முகக் கவசங்கள், கையுறை வழங்க வேண்டும், அரசு பிற துறைகளுக்கு அறிவித்தது போல் போக்குவரத்து தொழிலாளர்களுக்கும் முழு மையான சம்பளம் வழங்கிட வேண்டும், சம்பளத்தை குறைக்க கூடாது உள்ளிட்ட  தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன. மத்திய சங்கத்தின் பொது செயலாளர் ஜோதி  நிறைவுரையாற்றினார். கூட்டத்திற்கு வந்த அனை வருக்கும் சானிடைசர், முகக் கவசம் மற்றும் கபசுரகுடிநீர் வழங்கப்பட்டது. சுகாதாரத் துறை அறிவுறுத்தியபடி சமூக இடைவெளியுடன் பேரவை நடைபெற்றது.