மதுரை, அக்.1- சிஐடியு டாஸ்மாக் ஊழி யர் மாநில சம்மேளனத்தின் 5 ஆவது மாநில மாநாடு அக் டோபர் 2, 3 ஆகிய தேதிகளில் கோயம்புத்தூரில் நடை பெறுகிறது. இந்த மாநாட் டில் ஏற்றப்படவுள்ள கொடி மதுரையிலிருந்து எடுத்துச் செல்லப்படுகிறது. மதுரை மேலப்பொன்னகரம் சிஐ டியு மாவட்டக்குழு அலுவல கத்தில் இருந்து சனிக்கிழ மையன்று சிஐடியு மாநிலச் செயலாளர் இரா.தெய்வ ராஜ் கொடிப்பயணத்தை துவக்கி வைத்தார். டாஸ் மாக் ஊழியர் சங்க மதுரை மாவட்ட பொதுச் செயலாளர் டி.சிவக்குமார் கொடியை பெற்றுக் கொண்டார். இந் நிகழ்ச்சியில் சிஐடியு மதுரை மாநகர் மாவட்டச் செயலா ளர் இரா .லெனின், சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் சி.சுப் பையா, எம்.பாலசுப்ரமணி யன், எஸ்.சந்தியாகு, டாஸ் மாக் ஊழியர் சங்க நிர்வாகி கள் வி.செந்தில்குமார், எம். சுந்தரமகாலிங்கம், ஆர்.சந்தி ரன், எஸ்.தண்டபாணி உள் ளிட்டோர் கலந்துகொண்டனர்.