tamilnadu

img

மின்சாரம் தாக்கி உயிரிழப்பு சிறுவன் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் நிதியுதவி

சென்னை, ஜூலை 5 - திருவாரூர் மாவ ட்டம், கூத்தாநல்லூர் வட்டம், திருரா மேஸ்வரம் கிராமம் கோட்டகச்சேரி பகு தியில், கடந்த ஜூன் 29 அன்று மின்சாரம் தாக்கிப் பலியான சிறுவன் மதன்ராஜ் குடும்பத்திற்கு, முதல்வர் மு.க. ஸ்டா லின் ரூ. 2 லட்சம் நிவாரண உதவி அறி வித்துள்ளார். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த மற்றொரு சிறுவனான ரூப னுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தர விட்டுள்ள முதல்வர், அச்சிறுவனுக்கும் 50 ஆயிரம் ரூபாய் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார். இந்த இருவரும், திருவிழாவையொட்டி இரும்புக் கம்பி களுடன் கூடிய விளம்பரப் பதாகை களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத் திற்கு கொண்டு சென்றனர். அப்போது, எதிர்பாராதவிதமாக அருகே உள்ள மின்மாற்றியில் விளம்பர பதாகைகள் உராய்வு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டது.

;