சென்னையில் தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், ஜப்பான் நாட்டின் மிட்சுபிஷி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மே 9 அன்று கையெழுத்தானது. இதையடுத்து திருவள்ளூர் பெருவயல் கிராமத்தில் 52.4 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள மிட்சுபிஷி நிறுவனத்தின் ஏர் கண்டிஷனர் மற்றும் கம்ப்ரசர் தொழிற்சாலைக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.