சென்னை, ஜூலை 19 - வங்கக் கடலில் நில விய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப் பெற்றுள்ளதால், வட மேற்கு திசையில் நகர்ந்து சனிக்கிழமை (ஜூலை 20) அதிகாலை பூரி கடற்கரை அருகே கரையை கடக்க கூடும். ஒடிசாவின் பூரிக்கு 70 கி.மீ தென்கிழக்கி லும், கோபால்பூருக்கு 130 கி.மீ கிழக்கி லும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் நிலை கொண்டுள்ளது என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் உரு வானதை தொடர்ந்து தமிழ்நாட்டில் சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறை முகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டை ஏற்றுவதற்கு வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.