மயிலாடுதுறை, நவ.20 - உலக மரபு சின்னங்கள் பாதுகாப்பு வார விழாவை யொட்டி, மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையை நவ.25 ஆம் தேதி வரை கட்டணமின்றி சுற்றுலா பய ணிகள் மற்றும் மாணவர்கள் பார்வையிடலாம் என கோட்டை நிர்வாகம் அறிவித்துள்ளது. கி.பி. 1600 முதல் 1634 வரை தரங்கம்பாடியை ஆட்சி செய்த டேனிஷ்கா ரர்கள் (டென்மார்க் நாட்டி னர்) 1620 இல் கடற்கரைக்கு மேற்கே டேனிஷ் கலை நுணுக்கத்துடன் கோட் டையை கட்டி தங்களது அதி கார மையமாக பயன்படுத்தி னர். 400 ஆண்டுகளை கடந் தும் கம்பீரமாய் காட்சி யளிக்கும் இக்கோட்டையில் செயல்படும் அகழ் வைப்ப கத்தில் 14,15,16 ஆம் நூற் றாண்டுகளில் டேனிஷ் காரர்கள், தமிழர்கள் பயன் படுத்திய பொருட்கள், 1200 ஆம் ஆண்டுகால சிலை கள், பீங்கான், மண், மரத்தா லான பழமையான பொருட் கள், டேனிஷ் அரசர்கள், ஆளுநர்களின் புகைப்படங் கள், டேனிஷ்கால பத்தி ரங்கள், தரங்கம்பாடியை அடகு வைத்த தங்கத்தி லான பத்திர நகல், போர்க்கருவிகள், 16 ஆம் நூற்றாண்டில் தரங்கம்பாடி வந்த கப்பல் ஒன்றின் உடைந்த பாகங்கள் என ஏராளமான வரலாற்றுச் சின்னங்களை பத்திரப் படுத்தி காட்சிக்கு வைத் துள்ளனர். மேலும் கோட்டையின் தரைத்தளத்தில் சிறைச் சாலை, ஓய்வறைகள், பண்டக வைப்பறை, பீர், ஒயின் கிடங்கு அறைகளாக டேனிஷ்காலத்தில் பயன் படுத்தப்பட்ட அறைகள் பழமை மாறாமல் புதுப்பிக் கப்பட்டு பராமரிக்கப்படு கிறது. வரலாற்றுச் சின்னங்கள் நிறைந்த இக்கோட்டையை நவ.19 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை ஒரு வாரத் திற்கு கட்டணமின்றி பொது மக்கள், மாணவர்கள், இளை ஞர்கள் பார்வையிடலாம் என்று டேனிஷ் கோட்டை நிர்வாகம் அறிவித்துள்ளது. தற்போது டேனிஷ் கோட்டையினை புதுப் பிக்கும் பணி நடைபெறுவ தால், சுற்றிப் பார்க்க வருப வர்கள் கவனமுடன் பார்வை யிடவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.