tamilnadu

அதிகக் கட்டண வசூலைத் தடுக்க நிர்ணயிக்கப்பட்ட கல்விக் கட்டணம் விரிவான உத்தரவு பிறப்பிக்க நீதிமன்றம் முடிவு

மதுரை, மே, 29 -தனியார் பள்ளிகளில் அதிகக் கட்டணம் வசூல் செய்வதைத் தடுக்கும் வகையில் நிர்ணயிக்கப் பட்ட கல்விக் கட்டண விபரங் களை கல்வி ஆண்டின் துவக்கத்திலேயே வகுப்பு வாரியாக இணையதளத்திலும், பள்ளி அறிவிப்புபலகையிலும் வெளியிடவேண்டு மெனக் கோரிய மனுதாரரின் கோரிக்கையை ஏற்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் இது தொடர்பாக விரிவான உத்தரவு பிறப்பிப்பதாகத் தெரிவித்துள்ளனர் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலை சேர்ந்த அந்தோணி முத்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார்.அதில், “கன்னியாகுமரி மாவட்டத்தில் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் வரம்பில்லாமல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலை மையிலான கல்விக் கட்டணக் குழு ஒவ்வொரு வகுப்பிற்கும் வசூலிக்க வேண்டிய கட்டணத்தை நிர்ணயம் செய்து வருகிறது. இந்தக் கல்விக் கட்டண விபரம் கல்வியாண்டின் துவக்கத்தில் இணையதளத்திலும், சம்மந்தப்பட்ட பள்ளிகளின் அறிவிப்பு பலகையிலும் வெளியிடப் படுவதில்லை. இதனால் கல்விக் கட்டண விபரம் தெரியாமல் மக்கள்அவதிப்படுகின்றனர். இதைப் பயன்படுத்தி மெட்ரிக் பள்ளிகளில் இஷ்டம் போல் கட்டணம் வசூலிக் கின்றனர்.தனியார் பள்ளிகளில் அதிகக்கட்டணம் வசூல் செய்வதைத் தடுக்கும் வகையில் நிர்ணயிக்கப்பட்ட கல்விக் கட்டண விபரங்களை கல்விஆண்டின் துவக்கத்திலேயே வகுப்பு வாரியாக இணையதளத்திலும், பள்ளி அறிவிப்புப் பலகையில் வெளியிடவும், கூடுதல் கல்விக் கட்டணம் வசூலிப்பதை தடுக்கவும் உத்தரவிட வேண்டும்” எனக் கூறி யிருந்தார்.இந்த மனுவை புதனன்று விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், தாரணி அமர்வு, மனுதாரரின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு விரிவான உத்தரவு பிறப்பிப்பதாகத் தெரிவித்தனர்.