கூடலூர், மே 8- நீலகிரி மாவட்டம் முதுமலை புலி கள் காப்பகத்தில் கோடை மழை பெய்து வறட்சிக்கு நிவாரணம் அளித்துள்ளது. எங்கும் பசுமை நிலவுகிறது. காடுகளை விட்டு வெளியேறி உணவு, தண்ணீர் தேடி பல இடங்க ளுக்குச் சென்ற மான், பன்றி உள் ளிட்ட விலங்குகள் திரும்பி வந்துள் ளன. தற்போது வனப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் தீவன புற்கள், செடிகள் நிரம்பி யுள்ளன. கூடலூர் மைசூர் சாலையில் முது மலை வழியாக கால்நடைகள் கூட் டம் கூட்டமாக உணவு உண்பதை காணலாம். மழையின்றி வறண்டு கிடந்த காடுகளில் செடிகளும் மரங்க ளும் கருகி காட்டுத் தீ குறித்த அச்சத்தில் வனத் துறையினர் இருந் தனர். தற்போது கோடைமழையால் நீர் நிலைகளில் தண்ணீர் நிரம்பத் தொடங்கியுள்ளது. முதுமலை பந்திப்பூர் வனப்பகுதிகள் இந்த ஆண்டு அதிக வறட்சியை கண்டுள் ளன. வன சுற்றுலாப் பயணிகள் எந்தப் பகுதி வழியாகச் சென்றா லும், பல விலங்குகளைப் பார்க்க லாம்.