கண்ணூர், பிப். 20 - சமூகத்தில் சுரண்டல் முறை தொடரும் வரை கம்யூனிஸ்ட் அறிக்கையின் பொருத்தம் அதிகரித்து வருகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் எம்.ஏ.பேபி கூறி னார். கவனமாக ஆய்வு செய்யப்பட்ட விளக்கத்தின் மூலம் தொடர்ந்து உருவாகி வரும் உலகக் கண்ணோட்ட த்தை கம்யூனிஸ்ட் அறிக்கை முன்வைக்கிறது என்றும் அவர் கூறினார். சிந்தா வெளியீட்டகம் நடத்திய ரெட்புக் இலக்கிய விழாவில் ‘கம்யூனிஸ்ட் அறிக்கையின் சமகால முக்கியத்துவம்’ என்ற தலைப்பில் எம்.ஏ.பேபி உரை நிகழ்த்தினார். அப்போது அவர், “கம்யூ னிஸ்ட் அறிக்கை முழுக்க முழுக்க சமத்துவ சமுதா யத்தை கட்டியெழுப்பு வதற்கான முயற்சிகளுக்கு அடித்தளம் அமைக்கும் புத்த கம். மார்க்சும் ஏங்கெல்சும் ஒரு அறிவியல் பூகோள வியல் மட்டுமன்றி போராட்டத் திட்டத்தையும் வகுத்தனர். விஞ்ஞான சோச லிசத்தின் கருத்துக்களை தொகுத்து அறிக்கையை எழுதினர். உலகில் சோச லிசத்தின் சாதனைகளை உள்வாங்கி, தடைகளை களைந்து தொழிலாளி வர்க் கம் முன்னேற வேண்டும்” என்றார். இந்த விழாவுக்கு சிவ தாசன் எம்பி தலைமை வகித் தார்.
இடது ஜனநாயக முன் னணி ஒருங்கிணைப்பாளர் எம்.வி.ஜெயராஜன், பி.கே.விஜயன், கே.சிவக்குமார் பங்கேற்றனர். ‘கலையும் சமகாலமும்’ என்கிற தலைப்பில் எழுத்தா ளர்கள் பி.வி.ஷாஜிகுமார், டாக்டர் கே.வி.சிந்து, கே.கே.ரமேஷ், பிரமோத் வெள்ளச்சல், கே.டி.சசி உள்ளிட்டோர் பங்கேற்ற விவாத அரங்கம் நடைபெற் றது. ஓ.கே.குற்றிக்கோல் நினைவு குறுநாடக விழாவை ராஜ்மோகன் நீலேஸ்வரம் துவக்கி வைத் தார். ஏ.வி.அஜயகுமார் தலைமை வகித்தார். ஏழோம் நாட்டின்றே தீப்பாட்டுகார் சமிதியின் ‘பன்றிகளும் புறாவும்’, பாப்பினிச்சேரி துருத்தி மக்கள் கலைக்குழுவின் ‘செண்டா’, சாலாட், மடத்தில் முகுந்தன் நினைவு கலைக் குழுவின் ‘அச்சன்’, அஞ்சரகண்டி முற்போக்கு கலா சாகித்ய சங்கத்தின் ‘பேரன்ட்’, கண்ணபுரம் பிளாக் தியேட்டரின் ‘வாக்’ ஆகிய நாடகங்கள் அரங் கேற்றப்பட்டன. சிவப்பு புத்தக இலக்கிய விழா மற் றும் சிந்தா புத்தகத் திரு விழா திங்களன்று நிறை வடைந்தது.