ஊதினேன்
முகத்தில்
குலுங்கச் சிரித்தது குழந்தை.
•••
மழைதான்
நின்றுவிட்டதே
காளான்கள் ஏன் குடை விரிக்கின்றன?
•••
எல்லா நாட்டிலும்
கரம் பதித்தான்
உலக உருண்டையில்.
•••
மாற்றங்கள்
மாறாக தோன்றவில்லை
தூரிகைக்கு...
•••
மீன்கள் வருந்தின
மீனவனின் வறுமை நினைத்து
மீன்பிடி தடைகாலம்.
•••
பேருந்தோடு
அவன் மனமும் விரைந்தது
பிறந்த குழந்தையைக் காண.
•••
மின்சாரம் அற்ற போதும்
மிடுக்காய் சுழன்றது
அடுக்களையில் பெண்கருவி.
•••
சாதி கொடியை ஏற்றிவிட்டு
கீழே இறங்கினான்
கிழிசலோடு பெண்ணொருத்தி.
•••
நாடகக் கலைஞர்
வேடம் கலைந்தார்
வாழ்க்கை நாடகத்தில் நடிக்க.
•••