சென்னை, ஜூன் 17 - ஏழை, எளிய மக்களின் வாழ்விட உரிமைகளை பாதிக்கும் வகையில் தமிழக அரசு எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடாது என்று சிபிஎம் தலைவர்களிடம் முதலமைச்சர் உறுதி யளித்ததாக கே.பாலகிருஷ்ணன் கூறினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வெள்ளியன்று (ஜூன் 17) தலைமை செய லகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண்முகம், மாவட்டச் செயலாளர்கள் எல்.சுந்தரராஜன் (வடசென்னை), ஆர்.வேல்முருகன் (தென்சென்னை) ஆகியோர் சந்தித்து பேசினர். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் கே. பால கிருஷ்ணன் கூறியதன் சுருக்கம் வருமாறு: தமிழக மக்களின் பல்வேறு பிரச்சனை கள் குறித்த கோரிக்கை மனுக்களை முத லமைச்சரிடம் அளித்தோம். ஜெயங்கொண்ட த்தில் அனல் மின் நிலையம் அமைக்க கையகப் படுத்தப்பட்ட சுமார் 12 ஆயிரம் ஏக்கர் நிலத்தை விவசாயிகளிடம் திருப்பித் தரக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தமிழ்நாடு விவாசாயிகள் சங்கமும் நீண்ட காலமாக போராடி வந்தது. இதனையேற்று விவசாயிகள் இழப்பீடு பெற்றிருந்தாலும், நிலத்தை திருப்பி ஒப்படைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக அரசுக்கு நன்றி தெரிவித்தோம்.
மறுசீராய்வு மனு
நீர்நிலைப்புறம்போக்கில் உள்ள குடியிருப்பு களை இடிப்பதை தடுக்க அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். உச்சநீதி மன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும். நீர்நிலைப் புறம்போக்கு என்று இருப்பதாலேயே குடியிருப்புகளை இடிக்க உத்தரவிடுவது சரியல்ல. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மறு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. அதையும் இணைத்துக் கொண்டு தமிழக அரசு வாதாட வற்புறுத்தினோம். சரணாலயங்களை விரிவுபடுத்த உச்சநீதி மன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்பால் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பல மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், நீலகிரி, நெல்லை, குமரி மாவட்டங் கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் மாநில அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும். வனச் சரணாலயங்கள் உள்ள பகுதிகளில் மாடு மேய்க்கத் தடை விதித்தும், தேனி மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சிகளை அகற்ற வும் மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தர விட்டுள்ளது. இந்த தீர்ப்புகளை எதிர்த்து மேல் முறையீடு செய்ய வற்புறுத்தினோம். தீர்ப்புகளை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் அரசு பார்த்துக் கொள்ளும் என்று முதலமைச்சர் உறுதி அளித்தார்.
சிபிசிஐடி விசாரணை
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறப்பித்த அரசாணை 354இன் படி மருத்துவர் களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியதை முதலமைச்சர் ஏற்றுக் கொண்டார். தமிழ் உயர் ஆராய்ச்சி மையத்தை சீரமைக்க வேண்டும். தர்மபுரி மாவட்டம், தோப்பூரில் அருந்ததிய சமூகத்தைச் சேர்ந்த 3 இளைஞர்கள் மீது விபத்து என்ற பெயரில் கொலை முயற்சி நடந்துள்ளது. இது குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும்.
குடியிருப்புகள்
சென்னையில், பெத்தேல் நகர், சிட்லப்பாக் கம், கொரட்டூர், கொளத்தூர், கோவிந்தசாமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளை இடிக்கும் பிரச்சனை எழுந்துள்ளது. மே 9 அன்று முத லமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு அங்குள்ள மக்களுக்கு ஆறுதலை தந்தது. அந்த குடி யிருப்புகளை பாதுகாக்க அனைத்து சட்ட, நீதி மன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வலி யுறுத்தினோம். இதன்பிறகு, குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து எதிர்க் கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடந்துள்ளது; மீண்டும் கூடிப் பேச உள்ளனர். எதிர்க்கட்சிகள் ஒற்றை கருத்தின் அடிப் கடையில் செயல்படும் புதிய நிலைமை உரு வாகும் என்று முதலமைச்சர் நம்பிக்கை தெரி வித்தார். அதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தலைமை ஒத்துழைக்கும் என்று தெரிவித் தோம். இவ்வாறு அவர் கூறினார்.
குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் திட்டம்
இதன் பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர், “பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டு வர சட்ட மன்றத்திலும், முதலமைச்சரிடம் வலியுறுத்தி உள்ளோம். முதலமைச்சரும் பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளார். குடும்பத் தலைவிக்கு, மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டங்களை விரைந்து செயல்படுத்த வலியுறுத்தி உள்ளோம்” என்றார். “வனங்களில் உள்ள இயற்கை வளங்களை கொள்ளையடிக்க ஒன்றிய அரசு கார்ப்பரேட்டுகளுக்கு அனுமதி தருகிறது. பழங்குடி மக்களை பாதிக்கும் வகையில் திட்டங் களை செயல்படுத்துகிறது. வன உரிமைச் சட்டத்தின்படி, வனமும், வன மக்களும் பாதுகாக்கப்பட வேண்டும். வனங்களை கார்ப்பரேட்டுகளுக்கு கொடுத்தால் எப்படி சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும். வனங்களை பழங்குடிகள்தான் பாது காத்து வருகின்றனர். இதையெல்லாம் உச்ச நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும். வன விரிவாக்கம் என்ற பெயரில் அங்குள்ள மக்க ளை வெளியேற்றக் கூடாது” என்றும் அவர் கூறினார்.