tamilnadu

img

மாமன்னன் திரைப்படத்திற்கு தடை கோரிய வழக்கை அவசர வழக்காக விசாரிக்க முடியாது

உயர்நீதிமன்றம் மறுப்பு

மதுரை,  ஜூன்  28-   மாமன்னன் திரைப்படத்திற்கு தடை விதிக்கக் கோரிய வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.  திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவான மாமன்னன் திரைப்படம் ஜூன்  29 அன்று வெளியாகின்றது.    இந்நிலையில்  இத்திரைப்படத்திற்கு தடை விதிக்கக்கோரி திருநெல்வேலி, பாளை யங்கோட்டையை சேர்ந்த மணிகண்டன் என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு மனுவினைத் தாக்கல் செய்தார்.   அதில், இப்படத்தில் நடித்துள்ள கதா நாயகர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினராகவும், இளைஞர் நலன் - விளையாட்டு துறை அமைச்சராக வும் உள்ளார். உதயநிதி ஸ்டாலின் இப்படத் தில் நடித்துள்ளது இந்திய அரசிய லமைப்புச் சட்டம் 173 (a) எதிராக உள்ளது.  

இப்படம் வெளிவந்தால் இரு சமூகத்திற்கு இடையே பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.எனவே மாமன்னன் படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்கவும்,  இப்படத்தை  திரையிலோ, எந்த ஓடிடி போன்ற வேறு ஏதேனும் தளத்திலோ ஒளிபரப்பவும் தடை விதித்து உத்தரவிட வேண்டும். என்று தெரி வித்திருந்தார்.  இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி நீதிபதிகள் சுப்பிரமணி யன், விக்டோரியா கௌரி அமர்வு முன்பு புதனன்று முறையீடு செய்யப்பட்டது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், இதை அவசர வழக்காக விசாரணை செய்ய தேவையில்லை. திரைப்பட தணிக்கைத் துறை அனுமதி வழங்கியதில் நீதிமன்றம் தலையிட முடியாது. சட்ட ஒழுங்கு பிரச்ச னை ஏற்பட்டால் காவல்துறையினர் பார்த்துக் கொள்வார்கள். திரைப்படம் மக்கள் பார்க்கவே. இரண்டு நாட்களில் அதனை மறந்து விடுவார்கள். பேச்சு உரிமை, கருத்து உரிமை அனைவருக்கும் உள்ளது என்று தெரி வித்தனர். மேலும் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணை செய்ய முடியாது என்று நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.