tamilnadu

img

காவல் சித்ரவதையில் உயிரிழந்த தினேஷ் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

சென்னை, டிச. 23- காவல் நிலையத்தில் சித்ரவதை செய்யப்பட்டு உயிரிழந்த தினேஷ் வழக்கை கொலை வழக்காக பதிவு செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் காவல்துறை ஆணையரிடம் வெள்ளியன்று (டிச. 23) மனு அளிக்கப்பட்டது. வட சென்னை மாவட்டம், கொளத் தூர் தொகுதி நீலம் கார்டன் 3ஆவது தெருவில் வசித்தவர் விக்னேஷ் (26).  இவரை துரைப்பாக்கம் காவல் துறை யினர் ஒரு வழக்கு சம்பந்தமாக சந்தேகத்தின் பேரில் அழைத்து சென்று  சித்ரவதை செய்ததில் இறந்துள்ளார். இந்த நிலையில் சென்னை மாநகர  ஆணையர் அலுவலகத்திற்கு கட்சியின்  மாவட்டச் செயலாளர் எல்.சுந்தர ராஜன் தலைமையில் சென்ற தினேஷின்  மனைவி கவுசல்யா, தாயார் லதா,  சகோதரர் செந்தில் குமார், வாலிபர் சங்கத்தின் வடசென்னை மாவட்டச் செயலாளர் எல்.பி.சரவண தமிழன் ஆகியோர் மனு ஒன்றை கொடுத்தனர். பிறகு செய்தியாளர்களை சந்தித்த  எல்.சுந்தரராஜன், “இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட காவல் துறையினர் மீது உரிய விசா ரணை நடத்தி கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று காவல் துறை அதிகாரிகளிடம் வலியுறுத் தினோம். அப்போது, இந்த வழக்கை  சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றுவதாக வும், சம்பந்தப்பட்ட காவலர்கள் 4 பேர் காத்திருப்பு பட்டியலில் வைக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர் என்றார்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கையை ஏற்ற காவல்துறை அதிகாரிகள் சில மணி நேரத்திலேயே வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்தனர்.