tamilnadu

img

அடுத்த தலைமுறைக்கு வரலாற்றை கொண்டு செல்வதில் புத்தகம் இன்றியமையாதது

புதுச்சேரி, ஜன.1- அடுத்த தலைமுறைக்கு வரலாறு கள் கொண்டு செல்வதில் புத்தகம் இன்றியமையாதது என புத்தக விற்பனை இயக்கத்தை துவக்கி வைத்து  தலைவர்கள் பேசினர். புதுச்சேரியில் புத்தகங்களுடன் புத்தாண்டு கொண்டாட்டம் என்ற தலைப்பில் பாரதி புத்தகாலயத்தின் புதுச்சேரி கிளை சார்பில் ஒருவாரத் ்திற்கு புத்தக விற்பனை இயக்கம் லாஸ்பேட்டை ஈ.சி.ஆர். சாலையில் உள்ள விளிம்பு நிலை மக்கள் வாழ்வா தார மையத்தில் நடைபெற்று வரு கிறது.   இதன் துவக்க விழாவிற்கு புதுச்சேரி  புத்தக மையம் தலைவர் கல்வியாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார்.

பாரதி புத்தகாலயத்தின் புதுச்சேரி பொறுப்பாளர் செல்வம் வரவேற்றார். எழுத்தாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான துரை.ரவிக்குமார் புத்தக விற்பனை இயக்கத்தை துவக்கி வைத்து பேசினார். அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பின் நிர்வாகிகளில் ஒருவரும், மருத்து வருமான சுந்தரராமன், தமிழ் சங்க நிர்வாகி பாலசுப்பிரமணியன், திராவிடர் கழகத் தலைவர் சிவ.வீரமணி, தமுஎகச பிரதேசத் தலைவர் அரிகிருஷ்ணன், செயலாளர் உமா அமர்நாத், நிர்வாகிகள் லெனின் பாரதி,  அன்பழகன் கலை இலக்கிய பெரு மன்றத் தலைவர் எல்லை சிவகுமார் ஆகியோர் பேசினர்.

அப்போது அவர்கள் அடுத்த தலைமுறைக்கு வரலாறுகளை கொண்டு செல்வதில் புத்தகங்கள் இன்றியமையாததாக விளங்குகிறது என்றும், புத்தகங்கள் வாசிப்பை இளம்  தலைமுறையினரிடம் கொண்டு செல்ல  வேண்டும் என்றும் கேட்டுக் கொண்ட னர். தினசரி மாலை நேரத்தில் புதிய புத்தகங்களை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. மேலும் இங்கு வாங்கக்கூடிய அனைத்து புத்த கங்களும் 20 விழுக்காடு முதல் 40  விழுக்காடு வரை தள்ளுபடி வழங்கப்படு கிறது.