கோயம்புத்தூர், ஜூன் 19– ஆர்எஸ்எஸ் அமைப்புகளை சேர்ந்த வர்களை ராணுவத்தில் நுழைப்பது, ஒரு சமூக விரோத கும்பலை அரசின் செலவிலே ராணுவ மயப்படுத்தும் நட வடிக்கையை பாஜக ஒன்றிய அரசு மேற்கொள்ள திட்டமிடுவதாகவும், இதனை தொழிலாளி வர்க்கம் விழிப்பு டன் இருந்து முறியடிக்க வேண்டும் என சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தர ராசன் வேண்டுகோள் விடுத்தார். கோவையில் நடைபெறும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து சம்மேளனத்தில் 15 ஆவது மாநில மாநாட்டிற்கு தலைமை யேற்று சங்கத்தின் மாநில தலைவர் அ.சவுந்தரராசன் பேசுகையில், கடந்த 8 ஆண்டுகளில் பாஜக ஒன்றிய அரசு கொடுமையான நடவடிக்கை களை தொடர்ந்து மேற்கொண்டு வரு கிறது. இந்த நாட்டின் எதிர்காலத்தோடு சார்ந்து ஏழை, எளிய மக்கள் உள்ளனர். ஆனால் அதானியோ, அம்பானியோ நாடு எக்கேடு கேட்டு போனால் என்ன என்று வேறு எங்காவது போய் வாழ்ந்துவிடுவார்கள். ஆனால், இந்த நாட்டோடு தனது வாழ்க்கையை இணைத்துக் கொண்டிருக்கும் ஏழை, எளிய மக்கள் விவசாயிகள் மற்றும் இதர வார்க்கத்தவர்கள் அத்தனை பேரும் மோடி அரசினால் கடுமையான அவதிக்குள்ளாகியுள்ளனர். இத்தகை யோரை ஏதுமற்றவனாக ஆக்க வேண்டும் என துடிக்கிறார்கள். இதன்ஒரு பகுதிதான் மோடி அரசு கொண்டு வந்த விவசாயிகளுக்கு எதி ரான சட்டங்கள். விவசாயிகள் தங்களின் நிலங்களை இழந்து, ஏதுமற்றவர் களாக்கப்பட்டு நகரங்களுக்கு வர வேண்டும். முதலாளிகளுக்கு கொத்தடிமைகளாக, எதை செய்யவும் தயார், எதை கொடுத்தாலும் பெற்றுக்கொள்ளவும் தயார் என்கிற நிலையை உருவாக்க வேண்டும் என முயற்சிக்கிறார்கள்.
ஆனால் பாஜக கொண்டு வந்த விவ சாயிகளுக்கு விரோதமான சட்டத்தை தங்களின் விடாப்பிடியான போராட்டங் களின் மூலம் தற்காலிகமாக தடுத்துள் ளார்கள். அப்படியான போராட்டங்கள் தொடர வேண்டும். இன்று ராணுவத்தில் நான்கு ஆண்டுகள் காண்டிராக்ட் முறையில் ஆட்களை எடுக்கிறோம் என்கிறார்கள். கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு நமது தலைவர்கள் முதலாளித்துவம் எவ்வளவு கொடியது என்பதை பேசுகிற போது, நாடாளுமன்றத்தை, ரயிலை, சிறைச்சாலைகளை, ராணுவத்தை தனியார் மயப்படுத்துவார்கள் என்று பேசினோம். இப்படி நடக்கும் என நாங்கள் நம்பவில்லை ஆனால் இப்போது நடக்கிறது. நான்கு வருடம் 17 வயதில் இருந்து 27 வயதுக்குள்ளிட்ட முறுக்கான உடல் தகுதியோடு இருப்பவர்களை தேர்ந்தெடுப்பார்களாம். நான்கு ஆண்டுகள் கழித்து அவர்களை வெளியே அனுப்பிவிடுவார்களாம். இப்போது ராணுவ வீரர்கள் வாங்குகிற ஊதியத்தில் பாதிகூட கிடைக்காது. ஓய்வூதியம் இல்லை, எதுவும் இல்லை. நான்கு ஆண்டுகள் கொடுக்கப்படுகிற ஊதியத்தில் 30 சதவீதம் பிடித்தம் செய்து அதில் ஒருபகுதியை அரசு போட்டு தருமாம் அதனை பெற்றுக்கொண்டு வீட்டுக்கு போய்விட வேண்டும். ஏன் நான்கு வருடங்கள் என நிர்ணயித்துள்ளார்கள். ஐந்து வருடங்கள் என்றால் சட்டப்படி கிராஜூட்டி தரப்பட வேண்டும். ஆகவே நான்கு வருடம் என நிர்ணயிக்கிறார்கள். கிராஜூட்டி இல்லை, பென்சன் இல்லை. நான்கு வருடம் வேலை செய்ய வேண்டும். பிறகு வெளியேறவேண்டும். இதன் பின் அவர்களுடைய நிலை என்ன என்பதே கேள்வி. நாட்டை பாதுகாக்க வேண்டிய ராணு வத்தில், மிக அடிப்படையாக இந்த நாட்டின் பாதுகாப்பும், இந்த நாட்டினுடைய கௌரவ மும் அடங்கியிருக்கிறது. இந்த நாட்டில் மற்ற பல துறைகளை விட கொஞ்சம் சலுகையோ டும், உத்தரவாதத்தோடும், பணி முடித்து வீட்டுக்கு வந்தவுடனும் கூட ஒரு சமூக அந்தஸ்தோடு வாழுகின்ற நிலையில் ராணுவ வீரர்கள் இருந்தனர். அதனையும் இப்போது சீரழிக்கிறார்கள். ஒரு அரசாங்கமே இதை செய்யும் என்றால் தனியார் முதலாளிகள் எதையும் செய்ய துணிவார்கள். அது தான் இன்று பெரியபெரிய தொழிற்சாலைகளில் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் மட்டும் 26 ஆயிரம் பேர் ராணுவத்தில் சேர்வதற்காக 2 வருடங்க ளுக்கு முன்பே உடல் தகுதி தேர்வில் வெற்றி பெற்று, மருத்துவச் சான்றிதழ்களில் வெற்றி பெற்று, தேர்வுக்காக காத்திருக்கிறார்கள். கொரோனா தொற்றால் தேர்வு நடைபெறா மல் தள்ளிப்போனது. இதேபோன்று நாடு முழு வதும் சுமார் 6 லட்சம்பேர் ராணுவத்தில் சேர வேண்டும் என்கிற கனவுகளோடு அனைத்து தகுதிகளையும் பெற்று காத்திருக்கின்றனர். இவர்களின் கனவே அதுதான் என்னும் பட்சத்தில் அதனை சுக்குநூறாக பாஜக நொறுக்குகிறது. ஆகவே போராடுகிறார்கள். இந்த அக்னிபாத் திட்டத்தில் இன்னுமொரு ஆபத்து உள்ளது. ஆர்எஸ்எஸ் அமைப்பு களை சேர்ந்தவர்களை ராணுவத்தில் நுழைப் பதும். ஒரு சமூக விரோத கும்பலை அரசின் செலவிலே ராணுவமயப்படுத்தும் ஏற்பாடும் இந்த திட்டத்திற்குள் இருக்கிறது. இங்கு தான் நாம் விழிப்புடன் இருக்க வேண்டுடிய கட்டா யம் உள்ளது. இந்த அபாயங்களை உணர்ந்து, இந்த போக்குகளை எதிர்த்து மக்களை ஒன்று படுத்த வேண்டும். ஒற்றுமைப்படுத்த வேண்டும். என்ன நடந்தாலும் இறுதியில் மனிதனை மனிதன் சுரண்டுவது என்பதுதான் நடக்கும். அந்த சுரண்டல் நிற்கிற வரை அதை எதிர்த்த போராட்டம் என்பது தொடர்ந்து வெடிக்கும். அந்த போராட்டம் என்பது நியாய மான போராட்டம். இந்த நவீனமய பொருளா தார நெருக்கடியான சூழலை உலகின் பல நாடுகள் திணறிக்கொண்டிருக்கிறது. ஆனால் இந்த நெருக்கடியான நிலையிலும் சோச லிச நாடுகள் மட்டுமே கம்பீரமாக நடைபோடு கிறது. சோசலிசம் ஒன்றே தொழிலாளி வர்க்கத் தின் விடுதலை, மாற்றத்திற்கான வழி என்பதை நெஞ்சில் நிறுத்தி முன்னேறுவோம் என்றார். முன்னதாக மாநாட்டை வாழ்த்தி மின் ஊழி யர் மத்திய அமைப்பின் பொதுச்செயலாளர் எஸ்.ராஜேந்திரன், சிஐடியு மாவட்டத் தலை வர் சி.பத்மநாபன், ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் பொதுச்செயலாளர் கே.கர்சன், சாலைபோக்குவரத்து சம்மேளனத்தில் பொதுச்செயலாளர் எஸ்.மூர்த்தி, ஆட்டோ தொழிலாளர் சம்மேளனத்தில் பொதுச்செய லாளர் எம்.சிவாஜி உள்ளிட்டோர் உரையாற்றி னர்.