tamilnadu

img

தமிழகம் - தென்னிந்தியாவிற்கு எதிரானது பாஜக அரசு!

தமிழகம் - தென்னிந்தியாவிற்கு எதிரானது பாஜக அரசு!

அமர்நாத் ராமகிருஷ்ணன் இடமாற்றம் பழிவாங்கல் நடவடிக்கையே...

மதுரை, ஜூன் 17 - தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராம கிருஷ்ணன் மீண்டும் பணியிட மாற்றம் செய்யப் பட்டதையொட்டி, மதுரை மகபூப்பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தில் சு. வெங்கடேசன் எம்.பி. செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: இயல்பான இடமாற்றமல்ல! கீழடி அகழாய்வு குழுவில் இருந்து பணி யாற்றிய தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராம கிருஷ்ணன் இன்றைக்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தில்லியில் இருந்து நொய்டா விற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அது மட்டு மல்ல ஆவணப்படுத்தும் பிரிவிற்கு அவர் மாற்ற ப்பட்டுள்ளார். ஒரு அதிகாரி பணியிடமாற்றம் செய்யப்படுவது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. அது நிர்வாக நடைமுறையில் உள்ள ஒரு விஷயம் தான். ஆனால், தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் விஷயத்தில் அப்படி நடக்கவில்லை. விடாப்பிடியாகப் போராடியவர் கடந்த 8 ஆண்டுகளாக கீழடி அகழாய்வில் அதன் உண்மைக்காக எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் உறுதியாக பணியாற்றியவர் அமர்நாத் ராமகிருஷ்ணன். அப்படிப்பட்டவரை, அகழாய்வை நீங்கள் தொடர வேண்டாம் என்று 2017-ஆம் ஆண்டு வெளியேற்றினார்கள். அதே போல், அவர் மேற்கொண்ட கீழடி அகழாய்வின் அறிக்கையை நீங்கள் எழுத வேண்டாம்; இன் னொரு அதிகாரி எழுதட்டும் என்று தொல்லியல் துறை (ஏஎஸ்ஐ) உத்தரவிட்டுள்ளது. அதற்குப்பின் நீதிமன்றத்தை நாடி, நான் மேற்கொண்ட அக ழாய்வு குறித்து, நான் தான் அறிக்கை எழுத வேண்டும் அதுதான் மரபு, அதுதான் சரி  என்று முறையிட்டு, நீதிமன்றமும் அதனை ஏற்று  அமர்நாத் ராமகிருஷ்ணன் தான் அந்த அறிக்கை யை எழுத வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.  11 மாதங்களாக வாய்திறக்காத ஏஎஸ்ஐ அதற்குப் பிறகும் கூட கவுகாத்தியில் இருந்து கோவாவிற்குத் தான் அமர்நாத் ராமகிருஷ்ணன் மாற்றப்பட்டார். சென்னைக்கு மாற்றப்படவில்லை. இதனால், அவரால் ஆய்வு அறிக்கையை எழுத முடியாமல் இருந்தது. நீதிமன்றத்தை நாடித் தான், சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டார். அதற்குப் பிறகுதான், அவர் ஆய்வு அறிக்கை எழுதி ஒப்படைத்தார்.  ஒப்படைத்து இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டன. அந்த அறிக்கை இன்னும் வெளியிடப் படவில்லை. அறிக்கையை எப்போது வெளியிடு வீர்கள் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த பின்பு, 11 மாதத்தில் வெளியிடுவோம் என்று ஏஎஸ்ஐ  சொன்னது. அதற்குப் பின்பும் வெளியிடவில்லை. இந்த நிலையில் தான் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினோம். பின்னர் ஒன்றிய கலாச்சா ரத் துறை அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்தி னோம். அதற்குப் பின்பு தான் விரைவில் வெளியிடுவோம் என்று நாடாளுமன்றத்தில் உறுதி கொடுத்தார்கள். அந்த உறுதி மொழியை யும் காப்பாற்றவில்லை.  திடீரென தேவைப்பட்ட அறிவியல் ஆதாரம் கூட்டத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு மே 21 அன்று நீங்கள் செய்த அகழாய்வுக்கு கூடுதல் அறிவியல் ஆதாரம் வேண்டும் என்று கேட்டு கடிதம் கொடுத்துள்ளார்கள். கூடுதல் ஆதாரம் வேண்டும் என்றால் இவர்கள் நீதிமன்றத்திலேயே சொல்லி இருக்கலாம். 11 மாதங்களில் அறிக்கை வெளியிடுவோம் என்று நீதிமன்றத்தில் எப்படி சொன்னார்கள்? அதுபோகட்டும், நாடாளுமன்றத்தில் பேசும்போது கூட, இந்த அறிவியல் ஆதாரங்கள் போதாது கூடுதல் அறிவியல் ஆதாரங்கள் வேண்டும் என்று சொல்லி இருக்கலாம். ஆனால், நாடாளுமன்றத்தில் விரைவில் வெளியிடுவோம் என்று சொல்லிவிட்டு இப்போது கடைசிக் கட்டத்தில் வந்து கூடுதல் அறிவியல் ஆதாரம் வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.  அதன் தொடர்ச்சியாகத் தான் ஒன்றிய பண்பாட்டுத்துறை அமைச்சர், ‘கடந்த 10-ஆம் தேதி சென்னையில் உள்ள பாஜக அலுவலகத்தில் வந்து இதை ரீஜினலாக பார்க்காதீர்கள். கூடுத லாக அறிவியல் ஆதாரம் தேவை’ என்று சொல்லுகிறார். ஒத்துப்போகாதவர்களுக்கு மிரட்டல் இந்தப் பின்னணியில் தான், அமர்நாத் ராமகிருஷ்ணன் ஆவணப்படுத்தும் பிரிவிற்கு இட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் ஒரு இயக்கு நர். அந்த ஆவணப்படுத்தும் பிரிவில் எவ்வளவு பேர் பணியாற்றுகிறார்கள் என்று கேட்டேன். அனேகமாக இவர் மட்டும்தான் அனுப்பப்படு கிறார் என்று கூறினார்கள். ஒரு ஆய்வை நடத்தி யதற்காக ஒரு ஆய்வாளர் எப்படி எல்லாம் வேட்டையாடப்படுவார் என்பதற்கு தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு நிகழ்த்தி காட்டிக்கொண்டே இருக் கிறது. நாங்கள் விரும்புவதைப் போல் நீங்கள் இல்லை என்றால் எங்களுடைய கருத்துக்கு நீங்கள் இசைவாக இல்லை என்றால் நாங்கள் என்னவெல்லாம் செய்வோம் என்பதைத்தான் ஒன்றிய அரசு காட்டிக்கொண்டிருக்கிறது. மே 23 அன்று இந்தப் பிரச்சனை சம்பந்த மான அறிக்கையை நான் வெளியிட்டேன் அன்றி லிருந்து இன்று வரை 20 நாட்களாக தமிழ்நாட்டில் பேசும் பொருளாக ஆய்வறிஞர்கள், வரலாற்றா ளர்கள், தமிழக முதல்வர் உட்பட பல்வேறு அர சியல் கட்சி தலைவர்கள் பேசிக் கொண்டே இருக்கும் நிலையில் இன்று அமர்நாத் ராமகிருஷ்ணன் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாட்டுக்கு எதி ராக, தென்னிந்தியாவிற்கு எதிராக தென்னிந்தியா வின் வரலாற்றுக்கு எதிராக ஒன்றிய அரசு எந்த அளவிற்கு அடாவடியாக நடந்து கொள்கிறது என்ப தை வெளிக்காட்டுவதாகத் தான், அமர்நாத் ராம கிருஷ்ணன் இடமாற்றத்தை நாங்கள்பார்க்கிறோம்.  தனிமனிதனை இது போன்று வேட்டையாடு வதனால் வரலாற்று உண்மைகளை மறைத்து விட முடியும் என்று ஒன்றிய அரசு நினைக்கிறது. அவர் களின் இந்த செயலுக்கு, அரசியல் களத்தில் தமிழக மக்கள் தகுந்த பதிலை அளிப்பார்கள் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு சு. வெங்கடேசன் எம்.பி. கூறினார். செய்தியாளர் சந்தி ப்பின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புறநகர் மாவட்டச் செயலாளர் கே. ராஜேந்திரன், பா. ரவி ஆகியோர் உடன் இருந்தனர்.