இனிப்பு பானங்களின் கசப்பான விளைவுகள்
நாவிற்கு சுவையாகவும் அதிக இனிப்பாகவும் உள்ள சோடா போன்ற பானங்களில் மூளையின் சில பகுதிகளை தூண்டுவதற்காக அதிகப்படியான செயற்கை இனிப்புகள் சேர்க்கப்படுகின்றன. தற்காலிக உற்சாகத்தை தரும் இவற்றில் எந்தவிதமான சத்துகளும் இல்லை. இதைக் குடிப்பதை வழக்கமாகக் கொண்டால் பற்சிதைவு, உடல் பருமன், சர்க்கரை நோய், இதய நோய் ஆகியவற்றிற்கும் இட்டுச் செல்லும் என ஆய்வுகள் காட்டுகின்றன. இந்த ஆய்வில் 118 நாடுகளை சேர்ந்த 2.9 மில்லியன் மக்களின் தரவுகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. இனிப்பாக்கப்பட்ட பானங்களை எடுத்துக் கொள்வோரில் 1.2 மில்லியன் புதிய இதய நோயாளிகளும் 2.2 மில்லியன் சர்க்கரை நோயாளிகளும் உண்டாவது தெரிந்தது. இதில் சர்க்கரை நோயால் 80,000 மரணங்களும் இதய நோயால் 2,58,000 மரணங்களும் நிகழ்கின்றன. இத்தகைய கொடிய நிகழ்வுகளை இனிப்பு பானங்களின் தீமையை எடுத்துச் சொல்வதன் மூலம் குறைக்கலாம் என்கிறார் இந்த ஆய்வின் முதன்மை ஆசிரியரும் டஃப்டஸ் கழகத்தின் முன்னாள் ஆய்வு மாணவரும் இப்போதைய வாஷிங்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்தவரும் சத்துணவு அறிவியலாளருமான லவ்ரா லாரா- கேஸ்டர். நமது உடல் இந்த பானங்களை விரைவாக செரிப்பதால் இரத்த சர்க்கரை அளவு கூடுகிறது; எந்தவித சத்தும் கிடைப்பதில்லை. இந்த ஆய்வு நேச்சர் மெடிசின் (Nature Medicine) என்ற இதழில் வந்துள்ளது.
கொடிதினும் கொடிது
த்துக் கொண்டு விடுகிறது. வாட்ஸ் ஆப்பில் உள்ள ஒரு பலவீனத்தை பயன்படுத்தி இவ்வாறு செய்கிறது. மேலும் ஐ மெசேஜ், ஃபேஸ் டைம், டெலிகிராம், மற்ற செயலிகளிலும் சொடுக்குதல் இல்லாமலேயே (zero click) தொற்றும் வண்ணம் உருவாகியுள்ளது. அந்த மென்பொருள் ஒருவரது கைபேசிக்குள் புகுந்துவிட்டால் குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்கள், அழைப்பு பதிவுகள் ஆகியவற்றை படிக்க முடியும். ஸ்கிரீன் ஷாட்ஸ், பிரவுசர் செயல்பாடுகள் ஆகியவற்றை பின்பற்ற முடியும். நமது தொடர்பாளர்களையும் அணுக முடியும். தரவுகளை அனுப்பும் கோப்புகளை தனது சர்வரில் சேமிக்க முடியும். வாட்ஸ் ஆப் போன்ற செயல்களில் உள்ள மறைப்பையும் (encyiption) இது ஏமாற்றிவிடுகிறது. கைபேசியிலிருந்து என்கிரிப்ஷன் செய்யப்படுவதற்கு முன்னாலேயே நேரடியாக தரவுகளை இதை மறித்து விடுகிறது. பெரிதும் பாதுகாப்பானது என்று சொல்லப்படுகிற ஐ போன்களும் இதன் முன்னால் பலவீனமானதே. அதிலாவது கருவியின் செயல்பாடு பதிவு உண்டு. அதன் மூலம் தொற்றுக்களை கண்டுபிடிக்கலாம். ஆனால் ஆண்டிராய்டு போனில் எளிதாக இது உள் புகுந்து தன்னை மறைத்துக் கொண்டுவிடும். கைபேசியில் உள்ள இயக்கும் மென்பொருள் (operating system) எதுவாக இருந்தாலும் பெகாசஸ் குறி வைக்கப்பட்டவருடைய டிஜிட்டல் மற்றும் பவுதீக வாழ்வின் எல்லா அம்சங்களிலும் ஊடுருவ இயலும். எனவே உளவு பார்க்க மிகவும் சக்தி வாய்ந்த கருவியாக பார்க்கப்படுகிறது என்கிறார் பீப்பிள்ஸ் டெமாக்ரசி இதழ் கட்டுரையாளர் பப்பா சின்ஹா. இந்த மென் பொருள் என்எஸ்ஓ (NSO) எனும் நிறுவனத்தால் உண்டாக்கப்பட்டது. இஸ்ரேலின் மேனாள் உளவு அதிகாரிகளால் தோற்றுவிக்கப்பட்டு இயக்கப்படும் நிறுவனம் என்எஸ்ஓ.
செவ்வாய்க் கோளின் வடக்கு தெற்கு வேறுபாடுகள்
செவ்வாய்க் கோளில் தெற்குப் பகுதி மிகவும் உயர்ந்தும் வடக்குப் பகுதி தாழ்ந்தும் காணப்படுகின்றன. இதை இரு தன்மை(dichotomy) என்கின்றனர். இதன் காரணத்தை அறிவியலாளர்கள் ஆய்வு செய்துள்ளார்கள். நாசா அனுப்பிய இன்சைட் லேண்டர் எனும் செயற்கைக்கோள் செவ்வாயின் இரண்டு பகுதிகளுக்கும் நடுவிலுள்ள எல்லையில் ஏற்பட்ட நில நடுக்கங்களை கண்டுபிடித்துள்ளது. இந்த அதிர்வுகள் எவ்வாறு பரவின என்பதை ஆய்வு செய்ததில் செவ்வாயின் இரு வேறுபட்ட தன்மைகள் எவ்வாறு தோன்றின என்பது தெரிய வந்துள்ளது. உயரத்தில் மட்டுமல்லாது தென்பகுதியில் பள்ளங்களும் உறைந்துபோன எரிமலைக் குழம்பு தடங்களும் காணப்படுகின்றன. இதற்கு மாறாக வடக்குப் பகுதியின் பரப்பு சீராகவும் சமதளமாகவும் எந்தவித தடங்களும் இல்லாமலும் உள்ளது. மேலும் தெற்குப் பகுதியின் அடித்தளம் கனமானதாகவும் காந்தப்படுத்தப்பட்டதாகவும் உள்ளது. நில அதிர்வின்போது உண்டாகும் எஸ் அலைகள் தெற்குப்பகுதியில் விரைவாக ஆற்றலை இழப்பது காணப்பட்டது. தெற்குப்பகுதியின் அடித்தளத்திலுள்ள பாறைகள் சூடாக இருப்பதுவே இதற்குக் காரணமாக இருக்கும். ஒரு நேரத்தில் செவ்வாயிலும் பூமியில் இருப்பது போல கண்டத் தட்டுகள் (tectonic plates) இருந்தன. அந்த தட்டுகளின் நகர்வும் அதன் அடியிலிருந்த பாறைகள் உருகிய குழம்பும் இந்த வேறுபாடுகளுக்கு காரணமாக இருக்கலாம். கண்டத்தட்டுகள் நகர்வது நின்றபின் உருகிய குழம்புகள் உறைந்து போயிருக்கும். இந்த நிகழ்வுகளின் போது உருகிய குழம்புகள் தெற்குப்பகுதியில் மேல் நோக்கியும் வடக்குப் பகுதியில் கீழ் நோக்கியும் பாய்ந்து இந்த ஏற்ற இறக்க வடிவங்களை உண்டாக்கி இருக்கலாம். இந்த முடிவுகளை உறுதிப்படுத்த செவ்வாய் நில நடுக்கம் குறித்த அதிக தரவுகள், செவ்வாய்க் கோள் எவ்வாறு உருவானது மற்றும் பூமி, பிற கோள்களுடன் அதை ஒப்பிடுவது ஆகியவை தேவைப்படுகின்றன. இந்த ஆய்வு ‘Geophysical Research Letters,’ எனும் இதழில் வெளிவந்துள்ளது.