tamilnadu

img

10 ஆண்டு கழித்து வந்து சேர்ந்த பதில்

சென்னை, நவ.23- பட்டியலின மக்களுக்கான ஒன்றிய அரசின் துணை திட்டம் எந்தவிதத்திலும் முறையாக அமலாக்கப்படவில்லை என்பதும், படிப்படியாக இந்த திட்டத் திற்கான பட்ஜெட் மதிப்பீடு, திருத்தப்பட்ட மதிப்பீட்டில் கணிசமாக குறைக்கப்பட்டே வந்துள்ளது என்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றிய மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன், 10 ஆண்டுகளுக்கு முன்பு இதுதொடர்பாக எழுப்பிய கேள்விக்கு, அவரது பதவிக் காலம்  முடிவடைந்த பின்னர், வரலாற்றி லேயே இல்லாத அளவிற்கு தாமதமாக,  பத்தாண்டுகள் கழித்து தற்போது ஒன்றிய அரசு பதில் அனுப்பியுள்ளது. அந்த பதில் மூலம் மேற்கண்ட அதிர்ச்சிகர விபரம் தெரியவந்துள்ளது. 2012 மே 14 அன்று மாநிலங்கள வையில் ஒரு சிறப்புக் குறிப்பை முன்மொழிந்து, பட்டியலின மக்களுக்கான துணைத் திட்டமும், அதற்கான நிதி ஒதுக்கீடும் முறையாக அமலாக்கப்படவில்லை என்று டி.கே. ரங்கராஜன் உரையாற்றினார். அப்போ தைய பட்ஜெட்டில் பட்டியலின மக்க ளுக்கு 16.7 சதவீதம் ஒதுக்கீடு செய்வதற்கு பதிலாக வெறும் 7 சத வீதம் அளவிற்குத்தான் அரசு ஒதுக்கீடு செய்திருந்தது. அதை சுட்டிக்காட்டிய டி.கே.ரங்கராஜன், நிதி ஒதுக்கீடு மிகக் குறைவு என்பது மட்டுமல்ல; ஒன்றிய அரசு பணியிடங்களில் கணிசமான  எண்ணிக்கையில் பட்டியலினத்தவ ருக்கான பணியிடங்கள் காலியாகவே வைக்கப்பட்டுள்ளன என்றும் சுட்டிக்காட்டினார்.

2012 மே 14 அன்று நாடாளு மன்றத்தில் எழுப்பிய இந்த கேள்வி களுக்குதான், 2022 நவம்பர் 10 அன்று - 10 ஆண்டுகள் கழித்து - தற்போ தைய ஒன்றிய மோடி அரசு, டி.கே.ரங்க ராஜனுக்கு பதில் அனுப்பி வைத்துள் ளது. பத்து பக்கங்கள் கொண்ட அந்த பதிலில், பட்டியலின மக்களுக்கான துணைத் திட்டத்திற்கு மோடி அரசு ஆட்சிக்கு வந்த பின்னரும் கூட, கடந்த  8 ஆண்டு காலத்தில் நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்படவில்லை என்பதும் வெளிப்பட்டுள்ளது. 2012 முதல் 2022  வரை பட்டியலின துணைத் திட்டத்திற் காக ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதி ஒன்றாகவும், அதன் திருத்தப்பட்ட மதிப்பீடு கணிசமாக குறைக்கப்பட்டு இருப்பதும் வெளிப்பட்டுள்ளது. பட்டியலினத்தவர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் பின்ன டைவு காலிப் பணியிடங்களை நிரப்பு வதிலும் பெரும் தோல்வி ஏற்பட்டிருப் பதை பதில் கடிதம் ஒப்புக் கொண்டி ருக்கிறது. பட்டியலின மக்களிடையே 63.5 சதவீதம் மட்டுமே எழுத்தறிவு, 41.2  சதவீதம் அளவிற்கு மகளிரிடம் ஊட்டச் சத்து குறைபாடு உள்பட சமூக குறி யீடுகளிலும் பெரும் பின்னடைவு நீடிக் கிறது என்பதும் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக டி.கே.ரங்கராஜன் கூறுகையில், “10 ஆண்டுகளுக்குப் பின்பு மோடி அரசு பதில் அனுப்பி யுள்ளது. அரசாங்கங்கள் மாறினாலும் அரசு (State) என்பது தொடர்ச்சியாக செயல்பட்டு வருகிற ஒன்று. அந்த அடிப்படையில் இந்த பதிலை தற்போது அனுப்பியுள்ளனர் என்பது  புரிந்து கொள்ள முடிகிறது. காலதாம தம் ஆனாலும் இதன் மூலம் கிடைக்கப் பெற்றுள்ள விபரங்கள் முக்கியமான வை. இன்றும் பட்டியலின மக்களுக் கான துணைத் திட்டம் முறையாக,  முழுமையாக செயல்படுத்தப்பட வில்லை என்பதே உண்மை. இந்தப் பதில் கடிதத்தை அனுப்பியதோடு ஒன்றிய அரசு தனது கடமை முடிந்து விட்டதாக கருதக் கூடாது. பட்டியலின துணைத் திட்டத்தை உறுதியாக அமலாக்க வேண்டும். அதில் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு கூடுதல் பொறுப்பு உண்டு. துணைத் திட்ட அமலாக்கத்தை உறுதி செய்வதற்காக வலுவான தலையீட்டை செய்வது அவசியமாகும். அதை ஜனநாயக கடமையாக மாற்றும் பொறுப்பு அனை வருக்கும் உண்டு. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பொறுத்தவரை இப்பிரச்சனையை மேலும் மேலும் உறுதியோடும், வலு வோடும் எடுத்துச் செல்லும். பட்டிய லின துணைத் திட்டத்தை முழுமை யாக அமலாக்கச் செய்வது தொழிலாளி  வர்க்க இயக்கத்தின் முக்கியமான கடமை என்பதில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி உறுதியாக உள்ளது. இதற்கான போராட்டத்தில் கட்சி எப்போதும் முன்னணியில் நிற்கும்” என்று கூறினார்.  

முழு விபரம் : பக்கம் 3