சென்னை, மே 11- அகில இந்திய அளவில் ஏற்றுமதி யில் 3ஆவது இடத்தில் இருக்கும் தமிழ் நாட்டை முதலிடத்திற்கு கொண்டு வருவதே லட்சியம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்திய ஏற்றுமதி நிறுவனங்க ளின் கூட்டமைப்பு சார்பில் தென்மண்டல ஏற்றுமதிக்கான சிறப்பு விருது வழங்கும் விழா சென்னை ஆழ்வார்பேட்டையில் புதனன்று (மே 11) நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்று விருதுகளை வழங்கினார். பின்னர் முதலமைச்சர் பேசுகை யில், இந்திய அளவில் 35 ஆயிரத் திற்கும் அதிகமான ஏற்றுமதி நிறுவ னங்களை உறுப்பினர்களாக கொண்டிருக்கும் இந்த கூட்டமைப்பில் 5 ஆயிரத்திற்கும் அதிகமான உறுப்பினர்கள் தமிழ்நாட்டைச் சார்ந்த வர்கள் என்பது பெருமையாக உள்ளது. இந்திய பொருளாதாரத்திற்கு தேவையான ஏற்றுமதியில் தென் மண்டலம் முக்கிய பங்குவகிப் பதாகவும், அதிலும் குறிப்பாக தமிழ்நாடு சிறந்து விளங்குவதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டார். கடந்த 2020-21ஆம் ஆண்டில், இந்தியாவின் சர்வதேச வர்த்தகத் தில் ரூ.1 லட்சத்து 93 ஆயிரம் கோடி ஏற்றுமதி செய்து 8.97 விழுக்காடு பங்களிப்புடன் இந்தியாவிலேயே மூன்றாவது பெரிய மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது. இந்த விழுக்காடு ஆண்டுதோறும் அதிகரிக்க வேண்டும். தமிழ்நாட்டை முதலிடத்திற்கு கொண்டு வருவதே தனது லட்சியம் என தெரிவித்தார். தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் 24 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற விண்ணப் பித்திருப்பதாகவும், ஒரு மாவட்டத் திற்கு ஒரு பொருள் என்ற ஒன்றிய அரசின் திட்டத்தை செயல்படுத்த ஏற்றுமதி யாளர்கள் முன்வர வேண்டும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.