tamilnadu

img

அதிமுக இனிமேல் ஆட்சிக்கு வராது கார்த்திக் சிதம்பரம் எம்.பி., பேட்டி

மதுரை, மே 11- மதுரை கே.கே நகரில் காங்கிரஸ் கட்சி சார்பில் 200 க்கும் மேற்பட்ட தூய்மை பணி யாளர் மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு சிவகங்கை நாடாளு மன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் திங்க ளன்று நலத்திட்ட உதவிகளை வழங்கி னார்.  பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கார்த்திக் சிதம்பரம் கூறுகையில் “இந்திய பொருளாதாரம் இறங்கு முகத்தில் இருக் கும் சூழலில் ஊரடங்கால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்குக்கு முன்பே தொழில்துறையை சீரமைக்க நட வடிக்கை இல்லை. மத்திய அரசு தொழில் துறைக்கு ஊரடங்கு காலத்தில் ஏதும் செய்ய வில்லை. அமெரிக்கா 10 சதவீத ஜி.டி.பி யை நிவாரணமாக அறிவித்து உள்ளது.1 ஊர டங்கு உள்ளே ஒரு ஊரடங்கு அறிவித்தது தவறு. கோயம்பேடு பாதிப்புக்கு பின்னர் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பூரண மதுவிலக்கு என்பது சாத்தியமில்லாத ஒன்று. பூரண மது விலக்கை அமுல் படுத்தினால் கள்ளச்சாராயம் பெருகும். டாஸ்மாக் கடைகள் இருக்கும் இடத்தை முறைப்படுத்தப்பட வேண்டும். ரஜினி சொன்ன ஆட்சி மாற்றம் என்கிற கருத்து உண்மை. தமிழகத்தில் மீண்டும் அதி முக ஆட்சிக்கு வராது. காங்கிரஸ் கூட்டணி யுடன் திமுக ஆட்சிக்கு வரும். டாஸ்மாக் விற்பனையை ஆன் லைனில் கொண்டு வந்து முறைப்படுத்த வேண்டும்” என கூறி னார்.