தஞ்சாவூர், மார்ச் 5- தமிழகத்திலேயே முதல்முறையாக தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் தாய்-சேய் நல கண்காணிப்பு மையத்தை மேயர் சண்.ராமநாதன் திறந்து வைத்தார். துணை மேயர் டாக்டர் அஞ்சுகம்பூபதி, மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், மாநகர் நல அலுவலர் சுபாஷ்காந்தி ஆகி யோர் முன்னிலை வகித்தனர். விழாவுக்கு மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தலை மை தாங்கி, தாய்-சேய் நல கண்காணிப்பு மையத்தை திறந்து வைத்து கர்ப்பிணி களுக்கு ஊட்டச்சத்து பொருட்களை வழங்கிப் பேசியதாவது:- தஞ்சாவூர் மாநகரில் உள்ள நான்கு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலை யங்களில் தற்போது கர்ப்பக்கால பரிசோத னைகளை மேற்கொண்டுவரும் 1,212 கர்ப்பிணிகளில் 640 கர்ப்பிணிகள் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், ரத்தச் சோகை, தைராய்டு மற்றும் முந்தைய பிரசவ அறுவை சிகிச்சை போன்ற அதிக கவனம் தேவைப்படும் கர்ப்பிணிகளாக கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தினமும், தாய்சேய் நல கண்காணிப்பு மையத்திலிருந்து செல்போன் மூலம் தொடர்பு கொண்டு அவர்களுக்கு தேவை யான மருத்துவம் மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான ஆலோசனைகள் வழங்கப் படும். பேறுகாலம் நிறைவுற்ற பின் 42 நாட்கள் வரை தொடர்ந்து தாய், சேய் நலம் கவனிக்கப்படும். தாய்மார்களின் கர்ப்பகால இறப்பு மற்றும் சிசு இறப்பே இல்லை என்ற நிலையை எட்டுவதே இந்த தாய்-சேய் நல மையத்தின் நோக்க மாகும். என்றார். மண்டலக் குழுத் தலை வர்கள் புண்ணியமூர்த்தி, மேத்தா, ரம்யா சரவணன், கலையரசன் மற்றும் கவுன்சிலர்கள், டாக்டர்கள், செவிலியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கு பிறகு மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் செய்தியாளர் களிடம் கூறியதாவது:- ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் 112 பணிகள் எடுக்கப்பட்டு, இதுவரை 92 பணி கள் நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள 20 பணிகள் இன்னும் நான்கு மாதங்களில் முடிக்கப்படும். சிவகங்கை பூங்கா சீர மைப்பு பணி இன்னும் மூன்று மாதங் களுக்குள் முடிக்கப்படும். ஜெபமாலைபுரம் குப்பைக்கிடங்கு இருபது ஏக்கர் பரப்பளவு கொண்டது. இவற்றில் பத்து ஏக்கரில் குப்பைகள் தரம்பிரிக்கப்பட்டு, அகற்றப் பட்டுள்ளது. இன்னும் பத்து ஏக்கரில் குப்பை கள் அகற்றும் பணி விரைவில் முடிவடை யும். பத்து ஏக்கரில் அடுக்குமாடி குடி யிருப்புகள் கட்டப்படும். மீதமுள்ள பத்து ஏக்கரில் தஞ்சாவூர் பெரியகோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்க யாத்ரிநிவாஸ் கட்டப்படும். புதிய பேருந்து நிலையப் புரனமைப்புக்காக ரூ.50 கோடி, மீன்மார்க்கெட் கட்ட ரூ.35 கோடி, சீனிவாச புரம் - டி.பி.எஸ்.நகரை இணைக்கும் வகை யில் ரூ.120 கோடியில் பாலம் கட்ட திட்ட மதிப்பீடு தயார் செய்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வரும் பட்ஜெட்டில் நிதிஒதுக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. ‘மக்களோடு மேயர்’ என்ற திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு மக்களை சந்திக்க இருக்கிறோம் என்றார். மேலும் அவர் கூறுகையில், தமிழ கத்திலேயே தஞ்சாவூர் மாநகராட்சியில் மட்டும் தான் வரியை குறைத்து வசூல் செய்கிறோம். வியாபாரிகளின் நலனைக் கருத்தில் கொண்டு தான் கடை வாடகை நிர்ணயம் செய்யப்படுகிறது. தனியார் கட்ட டங்களில் செயல்படும் கடைகளை விட மாநகராட்சி கட்டடங்களில் செயல்படும் கடைகளுக்கு டெபாசிட், வாடகை குறைவு தான் என்றார்.