tamilnadu

img

கோயில் விழா

தஞ்சாவூர் ஜூன்.2-தஞ்சை மாவட்டம் பேராவூரணி வட்டம் ஆதனூர் கிராம வீமநாயகி அம்மன் கோயில் வைகாசி விழாவை முன்னிட்டு முகூர்த்தகால் ஊன்றும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. நீலகண்டப்பிள்ளையார் கோவில் நிர்வாக அதிகாரி பெ.சிதம்பரம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆதனூர், கருப்பமனை, கூப்புளிக்காடு கிராமத்தார்கள், ஆதனூர் ஆதிதிராவிடர்கள்  உள்ளிட்ட அனைத்து மண்டகப்படிதாரர், நிகழ்ச்சிதாரர்கள் என பலர் கலந்து கொண்டனர். கோயில் காப்பு கட்டும் நிகழ்ச்சி வைகாவசி 20ம் தேதி நடைபெற இருக்கிறது. கடந்த 4 ஆண்டுகளாக விழா நடைபெறாமல் இந்த ஆண்டு நடைபெறுகிறது.