tamilnadu

தஞ்சாவூர் மாவட்டம் 95.80 சதவீதம் தேர்ச்சி

தஞ்சாவூர் மாவட்டம் 95.80 சதவீதம் தேர்ச்சி

தஞ்சாவூர், மே 8 -  பிளஸ் 2 பொதுத் தேர்வில் தஞ்சாவூர்  மாவட்டம் 95.80 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று, மாநில அளவில் 13 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மாவட்டத்தில் 229 பள்ளிகளைச் சேர்ந்த 26,553 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதினர். இவர்க ளில் 25,438 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் 95.80 சதவீதம். இது,  கடந்த ஆண்டை விட 2.34 சதவீதம் கூடுதல். இதன் மூலம், மாநில அளவில் தஞ்சாவூர் மாவட்டம் கடந்த ஆண்டு 26 ஆவது இடத்தில் இருந்த நிலையில், தற்போது 13 ஆவது இடத்துக்கு முன்னே றியுள்ளது. மாவட்டத்தில் தேர்வு எழுதிய 12,307 மாணவர்களில் 11,584 பேரும், 14,246 மாணவிகளில் 13,854 பேரும் தேர்ச்சி பெற்றனர். அதாவது மாணவர்களில் 94.13 சதவீதம் பேரும், மாணவிகளில் 97.25 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

அரசு பள்ளிகளில் 93.69 சதவீதம் தேர்ச்சி

அரசுப் பள்ளி அளவில் மாவட்டத்தில்  104 பள்ளிகளில் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளில் 93.69 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இது, கடந்த ஆண்டை விட, 3.72 சதவீதம் அதிகம். இதன்மூலம், அரசுப் பள்ளிகளில் மாநில அளவில் தஞ்சாவூர் மாவட்டம் கடந்த ஆண்டு 25 ஆவது இடத்தில் இருந்த நிலையில், தற்போது 12 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. அரசுப் பள்ளிகளில், மாணவர்களில் 90.32 சதவீதம் பேரும், மாணவிகளில் 96.14 சத வீதம் பேரும் தேர்ச்சி பெற்றனர். மாவட்டத்தில் 14 அரசுப் பள்ளிகள் உள்பட மொத்தம் 65 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றன.

பார்வையற்றோர் பள்ளி

தஞ்சாவூர் மேம்பாலம் பகுதியி லுள்ள பார்வைத்திறன் குறையுடை யோருக்கான அரசு மேல்நிலைப் பள்ளி யில் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய 10 மாணவர்கள், 6 மாணவிகள் என மொத்தம் 16 பேரும் தேர்ச்சி பெற்றனர்.  காதுகோளாதோர், வாய் பேச இயலா தோருக்கான அரசு மேல்நிலைப் பள்ளி யில் 14 மாணவர்கள், 18 மாணவிகள் என மொத்தம் 32 பேர் தேர்வு எழுதி, அனைவரும் தேர்ச்சி பெற்றனர். இரு பள்ளிகளிலும் நூறு சதவீதத் தேர்ச்சி பெற்றுள்ளதற்கு அலுவலர்கள் பாராட்டு தெரிவித்தனர்.