மதுரை, மார்ச் 24- தாய்லாந்து நாட்டிலிருந்து கடந்த ஜனவரி 31-ஆம் தேதி மார்ச் 4-ஆம் தேதி இந்தியாவிற்கு இரண்டு குழுக்களாக எட்டு ப்பேர் வருகை தந்துள்ளனர். மார்ச் 12-ஆம் தேதி தமிழகம் வந்த அவர்கள் மார்ச் 21-ஆம் தேதி மதுரை அலங்காநல்லூரை அடு த்துள்ள மாலைப்பட்டியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் தங்கி யுள்ளனர். தகவலறிந்து சென்ற காவல்துறையினர், மருத்து வத்துறையினர் அவர்கள்எட்டுப்பேரையும் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக செவ்வா யன்று அழைத்துச் சென்றனர்.