tamilnadu

img

அம்பேத்கர் ஓவியம் மீது பெயிண்ட் வீசப்பட்டதால் பதற்றம்

மதுரை அருகே அம்பேத்கர் ஓவியம் மீது பெயிண்ட் வீசப்பட்டதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
மதுரை மேலூர் அருகே சாலையோரம் அம்பேத்கர் சுவர் ஓவியம் வரையப்பட்டிருந்தது. இந்நிலையில் அடையாளம் தெரியாத நபர்கள் ஓவியம் மீது பெயிண்ட்டால் சேதப்படுத்தி உள்ளனர். தகவலறிந்து அங்கு திரண்ட பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. மக்களின் போராட்டத்தை தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என உறுதியளித்தனர்.  இதைத்தொடர்ந்து ஓவியத்தை சேதப்படுத்திய  குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 
 

;