tamilnadu

img

குத்தகை விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

தஞ்சாவூர், ஜூன் 21-  மன்னர்கள் காலம் முதல் சாகுபடி செய்யப்பட்டு வந்த நிலை யில், நிலத்தை ஏலம் விடுவதைக் கைவிடக் கோரி தஞ்சாவூர் அரண்  மனை தேவஸ்தான அலுவலகம் முன்பு குத்தகை விவசாயிகள் புதன்  கிழமை முதல் காத்திருப்பு போராட்  டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தஞ்சாவூர் மாரியம்மன் கோவில் அருகே உள்ள, அருள் மொழிப்பேட்டை கிராமத்தில் 237 ஏக்கர் நிலங்களில் மன்னர்கள் காலம் முதல், ஏறத்தாழ 150  விவசாயிகள் குத்தகை அடிப்படை யில் சாகுபடி செய்து வருகின்ற னர். இதற்கு ஆண்டு குத்தகை யாக ஒவ்வொரு விவசாயியும் தலா  எட்டரை மூட்டைகள் செலுத்தி வந்த னர். இதற்கு தஞ்சாவூர் அரண் மனை தேவஸ்தானம் ரசீதும் வழங்கி வந்தது. இந்நிலையில், இந்த நிலங் களை புதன்கிழமை முதல் ஜூன்  26 ஆம் தேதி வரை ஏலம் விடப்  போவதாக இந்து சமய அறநிலை யத் துறையினர் விவசாயிகளுக்கு ஜூன் 19 அன்று நோட்டீஸ் கொடுத்த னர். அப்போது, “குத்தகை பாக்கி  உள்ள விவசாயிகளுக்கு ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதி இல்லை”  எனக் கூறினர்.

இந்த ஏல முறையைக் கைவிடக்  கோரி, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான அலுவலகத்தில் உதவி ஆணையர் கோ.கவிதா உள்ளிட்ட அலுவலர்களிடம், மார்க்  சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச்  செயற்குழு உறுப்பினர் சி.பக்கிரி சாமி தலைமையில், தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாவட்டச் செயலா ளர் என்.வி.கண்ணன், மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார், தமிழ்  நாடு அனைத்து சமய நிலங்களைப் பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்க மாவட்டச் செயலாளர் என். ராம் உள்பட ஏறத்தாழ நூறு விவ சாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தியதுடன், அதிகாரிகளிடமும் பேசினர்.  அப்போது, “காலங்காலமாக எங்களது முன்னோர்கள் உட்பட காடும், மேடுமாக இருந்த நிலங் களைச் சீர்படுத்தி சாகுபடி செய்து,  குத்தகை செலுத்தி வந்தோம். இந்  நிலையில், இந்நிலங்களை ஏலம்  விடுவதால் எங்களது வாழ்வாதா ரம் பாதிக்கப்படும். எனவே, ஏலம் விடுவதைக் கைவிட வேண்டும்” என வலியுறுத்தினர்.  ஆனால் நீதிமன்ற உத்தர வின்படியும், அரசு வழிகாட்டுதலின்  படியும்தான் நடவடிக்கை எடுக்  கப்படுகிறது என்றும், அதை மீறி  எதுவும் செய்ய முடியாது எனவும்  கூறினர். இதனால், அதிர்ச்சிய டைந்த விவசாயிகள் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். பின்னர், ஏற்கனவே உள்ள குத்தகைதாரர்களிடமே நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என வலி யுறுத்தி அதிகாரிகளிடம் மனு அளித்  தனர். இதையடுத்து, ஏலத்தை ஒத்தி வைப்பதாக அதிகாரிகள் தெரி வித்தனர். இதையடுத்து அனை வரும் அங்கிருந்து கலைந்து சென்ற னர்.