கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்க வேண்டும்
அடிமனை மற்றும் குத்தகை விவசாயிகள் வலியுறுத்தல்
திருவள்ளூர், ஜூன் 9- தமிழ்நாடு இந்து சமய அற நிலையத்துறை விதிகளை மீறி கோயில் நிலங்களை ஆக்கிர மிப்பாளர்களிடமிருந்து மீட்க வேண்டும் என, தமிழ்நாடு அடி மனை மற்றும் குத்தகை விவசாயி கள் சங்கத்தினர் வலியுறுத்தி யுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த அனுப்பப் பட்டு கிராமத்தில், இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்த மான பழமையான முத்தாலம்மன், கோவிலுக்கு சொந்தமான சுமார் 5 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த சூழ்நிலையில், இந்த இடங்கள் எல்லாம் பலருடைய ஆக்கிர மிப்பில் இருந்து வருகிறது. இந்த விவரங்கள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்திடம் விவரங்கள் கேட்டு விண்ணப்பித்துள்ளனர், இதற்கு மழுப்பலான பதில்களே இதுவரை வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அதே ஊரை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் இந்து அறநிலைய துறையில் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டறிந்ததில், அனுப்பம்பட்டு கோவிலுக்கு சொந்தமாக அதே கிராமத்தில் 175/1 மற்றும் 175/3 ஆகிய சர்வே எண்களில் இருக்கக்கூடிய சுமார் 3 ஏக்கர் நிலத்தை, பக்கத்து ஊரான ஜோதி நகர் பகுதியை சேர்ந்த பாஜக தேசிய பொறுப்பாளரான ஜானகிராமன் என்பவர் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வருவது அறநிலையத்துறை அதிகாரிகளால் கண்டறியப்பட்டது. திருவள்ளூர் மாவட்ட அற நிலையத்துறை அதிகாரிகள் கொடுத்த தகவலின் அடிப்படை யில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சி யர் பிரதாப் உத்தரவின் பேரில், கடந்த மாதம் முத்தாலம்மன் கோவிலுக்கு சொந்தமான இடம் மீட்கப்பட்டு, அறநிலையத்துறை அதிகாரிகள் அந்த நிலத்தில் யாரும் அத்துமீறி நுழைய கூடாது எனவும், எந்த ஒரு காரியத்திற்கும் அந்தக் கோயில் இடத்தை யாரும் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்ய கூடாது எனவும், ஆக்கிர மிப்பாளருக்கு நோட்டீஸ் வழங்கப் பட்டதுடன், அந்த இடத்தில் அறி விப்பு பலகையும் நடப்பட்டது. இந்நிலையில், இந்த கோவில் நிலத்தை ஏற்கெனவே ஆக்கிரமிப்பு செய்து பயன்படுத்தி வந்த பாஜக வின் தேசிய பொறுப்பாளர் ஆர்.எம்.ஆர்.ஜானகிராமன் மீண்டும் அதே கோவில் நிலத்தை அற நிலைய துறை அதிகாரிகளின் அறிவிப்பையும் மீறி ஆக்கிரமிப்பு செய்து டிராக்டர் மூலம் உழுது நெல் பயிர் நடவு செய்து இருக்கிறார். இது குறித்து, இந்து சமய அற நிலைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தால், அதிகாரி களிடம் இருந்து சரியான எந்த பதிலும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. தற்போது தமிழ்நாடு அரசு, தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய அறநிலைக்கு சொந்தமான கோவில் நிலங்கள், ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து பல ஆயிரம் ஏக்கர் நிலங்களை மீட்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய கோயில் நிலங்களை பாஜக கட்சியின் தேசிய பொறுப்பாளர் ஆக்கிரமிப்பு செய்திருக்கக் கூடிய நிலத்தை மட்டும் மீட்க முடியாமல் இருப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. அடிமனை மற்றும் குத்தகை விவசாயிகள் சங்கத்தின் வேண்டு கோள் அனுப்பம்பட்டில் தமிழ்நாடு அறநிலைய துறைக்கு சொந்த மான நிலங்களையும், அதேபோல் பொன்னேரி அருகில் உள்ள மாத வரம் ஊராட்சிக்கு உட்பட்ட சைனா வரத்தில் கோயில் நிலங்களை சுமார் 4 ஏக்கர் அளவுக்கு தனிநபர் ஒருவர் அற நிலையத்துறையின் தடை களை மீறி ஆக்கிரமித்து தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். இதை அனைத்தையும் மீட்க வேண்டும் என தமிழ்நாடு அடிமனை மற்றும் குத்தகை விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் எஸ்.இ.சேகர் வலியுறுத்தியுள்ளார்.