சென்னை, ஜூலை 26- டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை பாட்டிலில் விற்கும் போது ஆவின் பாலை ஏன் பாட்டிலில் அடைத்து விற்க முடியாது? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பிளாஸ்டிக் தடை உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரிய வழக்குகள் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. அதன் அடிப்படையில் ஆவின் பாலை பாக்கெட்டுகளில் அடைத்து விற்பதற்கு பதில் கண்ணாடி பாட்டிலில் அடைத்து விற்றால் பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்க்கப்படும் எனவும், ஆவின் பாலை பாட்டிலில் அடைத்து விற்க முடியுமா? என்றும் அறிக்கை தாக்கல் செய்ய ஆவின் நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டி ருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் வைத்திய நாதன் மற்றும் ஆஷா அமர்வில் விசார ணைக்கு வந்தது. அப்போது, ஆவின் நிறு வனம் சார்பில், ஆவின் பால் பாக்கெட்டு களில் இருந்து பாட்டிலுக்கு மாற்றலாமா? என்று மக்களிடம் கருத்து கேட்கப்பட்ட தாகவும், அதற்கு சரியான ஆதரவு கிடைக்கவில்லை என்றும் விளக்கமளிக் கப்பட்டது. ஆவின் நிறுவனத்தின் அறிக்கை குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை பாட்டிலில் விற்கும் போது, ஆவின் பாலை ஏன் பாட்டி லில் அடைத்து விற்க முடியாது என்றும், மது போதையில் பாட்டிலை கவனமாக கையாளும் போது, சுயநினைவுடன் இருக்கும் மக்களால் கண்ணாடி பாட்டிலை கையாள முடியாதா என்றும் கேள்வி எழுப்பி னர். மேலும் இது தொடர்பாக மீண்டும் ஆலோசனை நடத்தி, புதிய அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளி வைத்தனர்.