tamilnadu

img

டாஸ்மாக் ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

டாஸ்மாக் ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

திருவாரூர், ஏப்.21-  டாஸ்மாக்கில் 22-ஆண்டுகளாக பணிபுரியும் ஊழியர்களை நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரில் பணிநிரந்தம் செய்து அறிவித்திட கோரி, மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக, திருவாரூர் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம் அருகே, மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கம்-சிஐடியு சார்பாக, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் திங்கட்கிழமை நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பி.என். லெனின் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் இரா. மாலதி, மாவட்டத் தலைவர் எம்.கே.என். அனிபா, மாவட்ட பொருளாளர் கே. கஜேந்திரன் மற்றும் அமைப்பின் மாவட்டத் தலைவர் வி.சிவபாலன் ஆகியோர் கோரிக்கையை விளக்கி கண்டன உரையாற்றினர். மாவட்ட பொருளாளர் ஏ.முத்துவேல் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கோரிக்கையை நிறைவேற்றிடக் கோரி முழக்கமிட்டனர்.  டாஸ்மாக் கடைகளில் 22 ஆண்டுகளாக பணிபுரியும் டாஸ்மாக் ஊழியர்களை பணிநிரந்தரம் செய்திட வேண்டும், அரசு ஊழியர்களுக்கு இணையான அனைத்து சலுகைகளையும் 22.4.2025 அன்று நடைபெறும் சட்டமன்ற கூட்டத் தொடரிலே நிறைவேற்றிட வேண்டும், டாஸ்மாக் ஊழியர்களின் பணி ஓய்வு வயதை 60-ஆக உயர்த்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.