ஆர்.உமாநாத் சிறப்பு மலர், வேங்கைவயல் புத்தகம் வெளயீடு
புதுக்கோட்டையில் நடைபெற்ற தோழர் ஆர்.உமாநாத் நூற்றாண்டை முன்னிட்டு தோழர் உமாநாத் நூற்றாண்டு சிறப்புமலர் மற்றும் வேங்கைவயல் சம்பவம் குறித்த புத்தகம் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. திருச்சிராப்பள்ளி புறநகர் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.சிவராசன், மாநகர் மாவட்டக்குழு உறுப்பினர் அ.அன்வர்உசேன் ஆகியோர் கொண்ட குழுவினரால் தோழர் உமாநாத் சிறப்பு மலர் தயாரிக்கப்பட்டுள்ளது. மலரை கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட, மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் சாமி.நடராஜன், திருச்சிராப்பள்ளி மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.ராஜா ஆகியோர் பெற்றுக்கொண்டனர். வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் எழுதிய புத்தகத்தை மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி வெளியிட திருச்சிராப்பள்ளி புறநகர் மாவட்டச் செயலாளர் எம்.ஜெயசீலன், தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் டி.சலோமி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
புதுக்கோட்டை, ஏப்.26- நடைபெற உள்ள 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிரான அகில இந்திய அணியில் தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான அணி முன்னணி பாத்திரம் வகிக்கும் என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும், இரு முறை புதுக்கோட்டை மக்களவைத் தொகுதியின் உறுப்பினராகவும், இரு முறை நாகை சட்டபேரவைத் தொகுதி உறுப்பினராகவும் இருந்த ஆர்.உமாநாத் அவர்களின் நூற்றா ண்டு விழா கருத்தரங்கு புதுக்கோட்டை நகர்மன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடை பெற்றது. இக்கருத்தரங்கில் தோழர் ஆர்.உமாநாத் நூற்றாண்டு மலரை வெளியிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் பேசியது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான தலைவர்கள் சங்கரய்யா, நல்லசிவன், உமாநாத் போன்றோரின் நூற்றாண்டு விழாவை இப்போது கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இந்த நூற்றாண்டுகள் வெறுமனே தலைவர் களைப் புகழ்ந்து பேசுவது மட்டும் நோக்க மல்ல. தலைவர்களின் வாழ்க்கை முறையை மறுவாசிப்பு செய்யும் முறைதான் இது போன்ற விழாக்கள். எதிர்காலத்தில் நமது இயக்கப் பணிகளில் இடர்பாடுகளைச் சந்திக்கும்போது, உமாநாத் போன்றோரின் போராட்ட வாழ்க்கை அவற்றை எதிர்கொள்ள உதவிசெய்யும்.
கேரள மாநிலம் காசர்கோடு என்ற சிறிய கிராமத்தில் பிறந்தவர் தோழர் உமா நாத். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் படிக்க வந்த அவர், கம்யூ னிஸ்ட் கொள்கையின்பால் ஈர்க்கப்பட்டு படிப்பை உதறிவிட்டு முழுநேர கட்சிப்பணி யில் ஈடுபட்டார். தமிழ்நாட்டின் மாபெரும் தலைவராக உருவானார். புதுக்கோட்டை யில் இரு முறை மக்களவை உறுப்பினராக, நாகையில் இரு முறை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர். இந்தப் பதவிகளை எதிர்பார்த்து அவர் கட்சியில் சேரவில்லை. ஒன்பதரை ஆண்டு கள் சிறை வாழ்க்கையும், ஏழு ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கையும் வாழ்ந்தவர் உமாநாத். சிறையில் இருந்து உயிரைப் பண யம் வைத்து தப்பி வந்து மக்களுக்காக பணி யாற்றியவர் உமாநாத். கம்யூனிஸ்ட்டுகள் இன்னல்கள் பலவற்றை இன்முகத்துடன் ஏற்றுக் கொண்டு லட்சியத்துக்காக தியாகங்களைச் செய்யக்கூடியவர்கள். உமாநாத்தும், பாப்பாவும் என்ன சாதி என்று இப்போது வரை எங்களு க்குத் தெரியாது. அவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டு கட்சிப்பணியாற்றி யவர்கள். மூன்று பெண் குழந்தைகள் பிறந்தன. மூன்று பெண்களும் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்கள். சாதி ஏற்றத்தாழ்வுகளை எதிர்த்து வீரச்சமர் புரிகின்றவர்கள் கம்யூனிஸ்டுகள்.
இடஒதுக்கீட்டை ரத்து செய்து விடுங்கள் என்று சொல்லுகிற ஆர்.எஸ்.எஸ் இந்த நாட்டில் இருக்கலாம். எம்மதமும் சம்மதம் சொல்லுகிற இஸ்லாமியர்கள் இருக்கக் கூடாது என்கிற கோட்பாட்டை நிலை நிறுத்தப் பார்க்கின்றனர். நாடாளுமன்ற மாண்புகளையே சிதைத்து வருகின்றனர். ஏகாதிபத்தியம் இந்த நாட்டிலிருந்து விரட்டி அடிக்கப்பட வேண்டும் என தோழர் உமாநாத் போன்ற தலைவர்கள் போராடி னார்கள். ஆனால், ஏகாதிபத்திய சக்திகள் கரம் கோர்த்து நாட்டை ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. கார்ப்பரேட் முதலாளிகளுக்கு காவடி தூக்கும் அரசாக ஒன்றிய அரசு இருக்கிறது. இந்த நாட்டைச் சுரண்டுவதற்கு தொடர்ந்து அனுமதிக்க முடியாது. கூடாது. 2024-இல் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் மோடி ஆட்சியை வீட்டுக்கு அனுப்புகிற பணியை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி செய்யும். 2024 தேர்தலில் பாஜக வுக்கு எதிராக இந்திய அளவில் ஒரு மாபெரும் அணி உருவாக்கப்படும். அந்த பின்புலத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான அணி தமிழ்நாட்டில் முன்னணியாகச் செயல்படும் என்றார்.
உ.வாசுகி
மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி பேசும்போது, தொழிலாளர்களின் பிரச்ச னைகள் குறித்து அவர் தெளிவான அணுகு முறையை வைத்திருந்தார். பிரச்சனை களின் மூலவேரைக் கண்டறிந்து அதற்கு தீர்வுகாணும் வழிமுறைகளை தெளிவு படுத்துவார். அனைத்து மட்டங்களிலும் பெண்களின் பங்கு இருக்க வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்துவார். அகில இந்திய அளவில் உழைக்கும் பெண்களுக்கான ஒருங்கிணைப்புக்குழு வை உருவாக்குவதற்கு காரணமாக இருந்தார். பாஜக, ஆர்எஸ்எஸ் அரசியலை சித்தாந்த ரீதியாக எதிர்க்கும் வல்லமை பெற்றது கம்யூனிஸ்ட் இயக்கம் தான். போராளிக்கு ஓய்வு என்பதே கிடையாது. உமாநாத் வாழ்க்கையை முன்வைத்து இன்னும் நிறைய களப்பணியாற்ற வேண்டிய தேவை கம்யூனிஸ்ட்டுகளுக்கு இருக்கிறது. இந்தியாவில் உள்ள அரசியல் சவால்களை சந்திக்க உமாநாத் வாழ்க்கை உதவும் என்றார். (ந.நி.)