tamilnadu

மாட்டிறைச்சி அரசியலுக்கு இடமளிக்காதீர்!

ஈரோடு, மார்ச் 24- தமிழ்நாட்டில் மாட்டிறைச்சி அரசியலுக்கு இடமளிக்காதீர் என தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு வேண்டுகோள் விடுத்துள் ளது. ஈரோடு மாவட்டத்தில் புன்செய் புளியம்பட்டி நகராட்சி உள்ளது. இங்குள்ள வாரச்சந்தை 26 ஏக்கர் பரப்பளவு கொண்ட தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய சந்தையாகும். இச்சந்தையில் ஒதுக்குப்புறமாக மாட்டிறைச்சி கடைகளும் செயல்பட்டு வந்தன. அங்கிருந்த 13 கடைகளும் ஒருநாள் புல்டோசர் மூலம் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன. இதனால் சொற்ப வருமானம் பார்த்து வந்த 13 பட்டியலின குடும்பங்களின் வாழ்நிலை முற்றிலுமாகச் சிதைக்கப்பட்டுள்ளது. மேலும் குறைந்த விலையில் கிடை க்கும் அதிக சத்துள்ள உணவான மாட்டி றைச்சியைப் பயன்படுத்துவோரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அப்பாவி மக்கள் பலமுறை நகராட்சி நிர்வாகத்தை அணுகினர். உயர் அலுவலர்களுக்கும் மனு அனுப்பி வைத்தனர்.

அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் முறையிடப்பட்டது. ஆனால் பலன் இல்லை. எனவே, பாதிக்கப்பட்டவர்களுடன் இணைந்து மார்க்சிஸ்ட் கம்யூனஸ்ட் கட்சியும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் பல்வேறு போராட்டங் களை அறிவித்து நடத்தியது. ஒவ்வொரு முறையும் காவல்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் வட்டாட்சி யர் என இடைமறித்த அரசு நிர்வாகம் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என உறுதியளித்தது. ஆனால் அகற்றப்பட்ட கடைகள் செயல்பட அனுமதிக்க வில்லை.  இவ்வாறு கடந்த 4 மாதங்களாக போராட்டம் அறிவிப்பதும், பேச்சு வார்த்தைக்கு அழைப்பதும், உடன்பாடு காண்பதும் தொடர்கதை யாக உள்ளது. இந்நிலையில் மீண்டும் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள்  நலக்குழுவின் சார்பில் போராட்டம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மாவட்ட தலைவர் கே.இசாரத்தலி மற்றும் செயலாளர் ப.மாரிமுத்து ஆகியோர் தமிழ்நாடு முதல்வருக்கு, மாட்டிறைச்சி அரசியலக்கு இடமளிக்காதீர் என மனு அனுப்பியுள்ளனர்.