தூத்துக்குடி,நவ.14- தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் சார்பில் மாபெரும் கடன் வழங்கும் விழா தூத்துக்குடியில் நடைபெற்றது. தூத்துக்குடியை தலைமையிட மாகக் கொண்டு இயங்கி வரும் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி இந்தியா முழுவதும் 509 கிளைகளுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் 101வது நிறுவன நாளை முன்னிட்டு தூத்துக்குடி பாஸ் கரன் திருமண மண்டபத்தில் வங்கி யின் சார்பில் மாபெரும் கடன் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் நாராயணன் பொது மேலாளர் (கடன் பிரிவு) வரவேற்புரை யாற்றினார். வங்கியின் நிர்வாக இயக்கு நரும், முதன்மை நிர்வாக அலுவலரு மான கிருஷ்ணன் , விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற தூத்துக்குடி மருத்துவ கல்லூரி முதல்வர் மருத்துவர் சிவகுமார், வேல வன் ஹைபர் மார்க்கெட் நிர்வாக இயக்குநர் தங்கவேல் நாடார், ராசி தேங்காய் எண்ணெய் மில் பங்குதாரர் டேவிட் ஆகியோரை மரியாதை செலுத்தி கௌரவித்தார்.வேலவன் ஹைபர் மார்க்கெட் உரிமையாளர் ஆனந்த் வாழ்த்துரை வழங்கினார். மெர்கன்டைல் வங்கியின் பல்வேறு கிளைகளின் சார்பாக பயனீட்டாளர் களுக்கு கடன் வழங்கும் விழாவும், தூத்துக்குடி மாவட்ட அரசு மருத்துவ மனையும், வங்கியும் இணைந்து நடத்திய இரத்ததான முகாம் மற்றும் இலவச மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்றது. விழாவில் வங்கியின் இயக்குநர் விஜயராஜ், பொது மேலாளர்கள் சூர்ய ராஜ், இன்பமணி, ரமேஷ், துணை பொது மேலாளர் விஜயன் மற்றும் நகரின் முக்கிய வியாபார பிரமுகர்களும் வங்கியின் கிளை மேலா ளர்களும், பயனாளிககும், வங்கி ஊழியர்களும் கலந்து கொண்டனர். மண்டல மேலாளர் சுந்தரேஷ்குமார் நன்றி கூறினார். விழாவில் வங்கியின் சார்பில் பயனா ளியான போர்ட் சிட்டி இம்பெக்ஸ் நிறு வனத்தின் உரிமையாளர் விக்னேஷ் காசோலை பெற்றுக் கொண்டார்.