தமிழ்நாடு உயர்நிலை-மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில நிர்வாகிகள் தேர்வு
தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில நிர்வாகிகள் தேர்வு சனிக்கிழமை திருச்சி யில் நடைபெற்றது. சங்கத்தின் நிறுவனத் தலைவர் முனைவர் அ. மாயவன் முன்னிலையில், தேர்தல் ஆணையர்களாக எஸ்.ஆனந்தன், டி.ஜனக ராஜ், எஸ்.சண்முகம், கே.ஜி.பாஸ்கரன், பி.தாண்டவராயன் ஆகியோர் செயல்பட்ட னர். இந்தத் தேர்தலில் மாநிலத் தலைவராக சி.ஜெயக்குமார், பொதுச் செயலாளராக எம். குமரேசன், பொருளாளராக எம்.விஜய சாரதி, துணைப் பொதுச் செயலாளராக எம்.மாயகிருஷ்ணன், தலைமை நிலைய செயலாளராக எஸ்.தமிழ்வாணன், செய்தித் தொடர்பு செயலாளராக எஸ். நல்லதம்பி, சட்டச் செயலாளர்களாக க.பிச்சைக்கனி, க.செ.பாலகிருஷ்ணன், பெ.சபாபதி, மகளிரணிச் செயலாளர்களாக இரா.மதுரா, து.வாசுகி, சு.மு.கிருஷ்ணவேணி ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர். மாநில தணிக்கையாளர்களாக எம். வில்பபதி, பி.கணேஷ்ராஜா, எம்.முருகே சன், மாநில துணைத் தலைவர்களாக டி.இதய ராஜா, ஏ.முருகன், பி.கே.ஈஸ்வர்பாபு, கே.எம்.வேலவன், ஸ்ரீரங்கநாதன், மாநிலச் செயலாளர்களாக ஆர்.இரஞ்சித்குமார், பி.விஜயகுமார், ஏ.அசோகன், ஆர்.முத்துச் சாமி, எச்.ஞானமணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பை உடனடியாக வழங்க வேண்டும். ஊக்க ஊதிய உயர்வினை உடனடியாக வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.