கோவை, டிச. 9- இந்தியாவிலேயே அதிக மான சுகாதார நிலையங்கள் உள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது என மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்தார். கோவை பீளமேட்டி யிலுள்ளஅரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்க ளுக்கு வெள்ளை அங்கி அணி வித்தல் மற்றும் தமிழ் மன்றம் தொடக்க விழா, கோவை அரசு மருத்துவமனை மற்றும் சூலூர் அரசு மருத்துவமனையில் கூடு தலாக கட்டப்பட்ட கட்டிடங் கள் ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலைய கட்டிடங்கள் திறப்பு விழா வெள்ளியன்று (டிச.9) நடைபெற்றது. இதில், மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோர் பங்கேற்று புதிய திட்டங்களை தொடங்கி வைத்தனர். இந்நிகழ்வில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகை யில், “கோவை அரசு மருத்து வக் கல்லூரி தொடங்கப்பட்டு 56 ஆண்டுகளாகிறது. கடந்த ஆண்டு வரை 150 மாணவர்கள் சேர்க்கைதான் நடைபெற்றது. ஒன்றிய அரசிடம் முதலமைச் சர் தொடர்ந்து வலியுறுத்திய தன் பேரில் தற்போது 200 மாண வர்கள் சேர்க்கை நடைபெறு கிறது” என்றார்.
தமிழகத்தில் 71 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. கூடுதல் மாணவர் சேர்க்கையிலும், அதிக மருத்துவக்கல்லூரிகள் இருக்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது. 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு அரசுப் பள்ளி மாண வர்களுக்கு பயனளித்துள்ளது. இந்தாண்டு மட்டும் 565 பேருக்கு இட ஒதுக்கீட்டில் இடம் கிடைத்துள்ளது. தமிழக மாணவர்கள் கல்வியில் மேம் பட்டுள்ளனர். தமிழக மருத்து வக் கல்லூரிகளில் பெரும் பகுதியான இடங்களை தமிழக மாணவர்களே பிடித்துள்ள னர். கோவைக்கு மட்டும் 63 இடங்களில் நகர்ப்புற நலவாழ்வு மையம் கிடைத் துள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் ஒரு மாதத்தில் மருத்து வர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த களப்பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் கூறினார். மணியகாரன் பாளையத் தில் புதிதாக நகர்ப்புற சுகாதார நிலையம் அமைய உள்ளது. தமிழ்நாட்டில் 2,286 நகர்ப்புற சுகாதார நிலையங்களும், ஆரம்ப சுகாதார நிலையங்க ளும் உள்ளன. 8713 துணை சுகா தார நிலையங்கள் உள்ளன. நாட்டிலேயே சுகாதார நிலை யங்கள் அதிகமாக உள்ள மாநிலம் தமிழகம் தான். மக்கள் தொகை அடிப்படையில் இது போதாது. அதனால் புதிய சுகாதார நிலையங்கள் அமைப் பதற்கான முயற்சியில் முதல மைச்சர் ஈடுபட்டுள்ளார்
இதன் மூலம் தமிழகம் மருத்துவத்துறையில் தன்னி றைவு பெறும். மக்களை தேடி மருத்துவத்திட்டத்தில் சுமார் 1 கோடி பயனடைந்துள்ளனர். இந்த திட்டம் உலகிலேயே தமிழகத்தில் தான் செயல்படு கிறது எனவும் அமைச்சர் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசு கையில், கோவை மாவட்டத் தில் உள்ள அரசு மருத்துவ மனை, துணை சுகாதார நிலையங்களில் கூடுதலாக கட்டப்பட்ட கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மொத்தம் 19 பணிகள் என இதற்காக ரூ.8 கோடியே 78 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை, ஊரக உள்ளாட்சித் துறை நகர் புற உள்ளாட்சி அமைப்பு ஆகிய துறைகள் ஒன்று சேர்ந்து அமைச்சர்களும் செய லாளர்களோடு கூட்டம் நடத்தி யுள்ளோம். மாவட்ட வாரியாக இணைப்பு குழுக்களை ஏற்படுத்தி ஒருங்கிணைப்பு குழு மூலம் மாவட்டம் தோறும் வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகள் கடந்த 5 மாதங்களுக்கு முன்பாகவே ஏற்படுத்தப்பட்டது என்றும் அமைச்சர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையர் பிரதாப், மேயர் கல்பனா, துணை மேயர் வெற்றிச்செல்வன் கோவை அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா மற்றும் பேராசிரி யர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.