தீக்கதிர் சென்னை பதிப்புக்கு கேமரா வாங்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் (சிஐடியு) சார்பில் ரூ.1லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான காசோலையை தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன தலைவர் அ.சவுந்தரராசன், தீக்கதிர் முன்னாள் பொதுமேலாளர் சி.கல்யாணசுந்தரத்திடம் வழங்கினார். சம்மேளன பொதுச் செயலாளர் ஆறுமுக நயினார். துணைத்தலைவர் எம் சந்திரன், சங்கத்தின் பொதுச்செயலாளர் தயானந்தன்,பொருளாளர் பாலாஜி ஆகியோர் உடனிருந்தனர்.