சென்னை, ஜூன் 12- கல்வியின் தரத்தை மேம்படுத்த மாவட்டந் தோறும் 24 பேர் கொண்ட குழுஅமைக்க ஆட்சி யர்களுக்கு, தலை மைச் செயலாளர் உத் தரவிட்டுள்ளார். மாவட்ட ஆட்சியர் தலைமையில் காவல் துறையின் சார்பில் காவல் கண்கா ணிப்பாளர், திட்ட இயக்குநர், நகராட்சி நிர்வாக ஆணையர் உள்ளிட்ட 24 பேர் கொண்ட குழுவை அமைக்க வேண்டும். கல்வி முறை மற்றும் தரத்தை மேம்படுத்து வது தொடர்பாக மாவட்ட அளவிலான ஆய்வுக் கூட்டம் நடத்த வேண்டும். பள்ளி உட்கட்டமைப்பு, கல்வி சார்ந்த சேவை கள் மற்றும் பிரச்சனைகள் குறித்து ஆய்வு நடத்த வேண்டும். மாணவர் சேர்க்கை, வருகை, பள்ளி யில் இருந்து வெளியேறிய குழந்தைகள், பள்ளிக்கு வராத குழந்தைகள் பற்றி ஆலோ சிக்க வேண்டும். ஹைடெக் லேப், தேர்வு கள், எண்ணும் எழுத்தும், இல்லம் தேடிக் கல்வி, வானவில் மன்றம், விழுதுகள் பற்றி யும் ஆலோசிக்க வேண்டும் என உத்தர வில் கூறப்பட்டுள்ளது.