சிறு குறு நடுத்தர தொழில்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடன் தள்ளுபடி
கேரள தொழிற்துறை அமைச்சர் பி.ராஜீவ் பெருமிதம்
கோவையில் நடைபெற்ற தொழில்பாதுகாப்பு மாநாட்டில் கேரள மாநில தொழிற்துறை அமைச்சர் பி.ராஜீவ் பேசுகையில், சிறு,குறு, நடுத்தர தொழில் துறை என்பது குறைந்த முதலீட்டில் அதிகளவு வேலைவாய்ப்பு அளிக்கும் துறையாகும். ஜிஎஸ்டி உள்ளிட்ட ஒன்றிய அரசின் நடவடிக்கையால் சிறு, குறு, நடுத்தர தொழில் துறை பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட் டுமே உதவி வருகிறது. இதனால், சிறு, குறு, நடுத் தர தொழில் துறை பெரும் நெருக்கடியில் உள்ளது. கேரள மாநில அரசு, தொழில் துறை முன்னேற்றத் திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரு கிறது. இதன் மூலம் கேரள மக்களின் நுகர்வு சக்தி அதிகரித்துள்ளது. கேரளத்தில் 24 சதவீத மக்கள் தனிப்பட்ட முறையில் நான்கு சக்கர வாகனங்கள் வைத்துள்ளனர். இது அமெரிக்க மக்களின் வாழ்க்கை தரத்துடன் ஒத்துள்ளது. கேரளத்தில் சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. புதிதாக 1.34 லட்சம் தொழில் நிறுவனங்கள் தொடங்க 8 ஆயிரத்து 45 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள் ளது. இதன் மூலம் 2.89 லட்சம் வேலைவாய்ப்பு உரு வாக்கப்படும். ஒரு உள்ளாட்சிக்கு ஒரு திட்டம் என்ற வகையில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவ னங்கள் தொடங்க ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாட்டில் 46 சதவீத தோட் டப்பொருள்கள் கேரளத்தில் உற்பத்தி செய்யப்படு கிறது. இதனை சந்தைப்படுத்த எம்எஸ்எம்இ கிளி னிக் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.
அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு
கோயம்புத்தூர், மார்ச் 5- சமூக நீதி, சமச்சீர் வளர்ச்சி என்ற அடிப்படையில் தமிழக அரசு செயல் பட்டு வருகிறது. ஒன்றிய அரசின் தவ றான கொள்கையால் குறு,சிறு தொழில்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி யுள்ளதாக சிறு,குறு தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் குற்றம் சாட்டினார். கோயம்புத்தூர் எம்எஸ்எம்இ அசோசியேசன் சார்பில் தமிழ்நாடு சிறு, குறு, நடுத்தர தொழில் பாதுகாப்பு மாநாடு சுகுணா ஆடிட்டோரியத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நட ராஜன் மாநாட்டுக்கு தலைமையேற்றார். இம்மாநாட்டில், தமிழகம் முழுவ தும் இருந்து பல்வேறு துறை சார்ந்த தொழில்முனைவோர் சங்கத்தின் நிர் வாகிகள் பங்கேற்று, இன்றைய தொழில் நிலைமை, அரசின் கடமைகள் குறித்து உரையாற்றினர். இதில், தமிழ்நாடு சிறு, குறு தொழில்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், கேரள தொழிற்துறை அமைச்சர் பி.ராஜீவ் மற்றும் சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தரராசன் ஆகி யோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர். பிணையில்லா கடன் திட்டம் முன்னதாக மாநாட்டை துவக்கி வைத்து சிறு, குறு தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசுகை யில், “கொரோனா பெருந்தொற்று காலத்தில் சிறு,குறு தொழிற்துறை கடு மையாக பாதிக்கப்பட்டது.
அதேநேரத் தில், ஒன்றிய அரசின் தவறான பொரு ளாதாரக் கொள்கை காரணமாக பெரும் பாதிப்பிற்குள்ளாகி இத்தொழில்கள் நெருக்கடியில் சிக்கின. குறிப்பாக, பண மதிப்பிழப்பு நடவடிக்கை, கார்ப்பரேட் ஆதரவு கொள்கை, ஜிஎஸ்டி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளால் சிறு, குறு, நடுத்தரத் தொழில் துறை கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. நாட்டிலேயே தமிழகத்தில் தான் சிறு, குறு, நடுத்தர தொழில் துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கு வதில் தமிழகம் 3 ஆவது இடத்தில் உள் ளது. ஆட்சி பொறுப்பேற்ற குறுகிய காலத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் தொடங்க அனு மதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக சொத்து பிணையில்லா கடன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தமி ழக அரசு செயல்படுத்தி வருகிறது. கோவையில் 77 எம்எஸ்எம்இ நிறுவ னங்களுக்கு ரூ.59.58 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 5 தொழிற்பேட்டை திட்டம் அறிவிக்கப் பட்டு 50 சதவீத பணிகள் முடிவடைந் துள்ளன. சமூக நீதி, சமச்சீர் வளர்ச்சி என்ற கோட்பாட்டை உறுதியாக பற்றிக் கொண்டு தமிழக அரசு செயல்பட்டு வரு கிறது. கோவையில் குறுந்தொழில் பேட்டை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பரிசீலிக்கப்படும். சிறு, குறு தொழில்களுக்கு அரசு சாரா நிதி நிறு வனங்கள் மூலம் கடன் வழங்க தமிழக அரசு ஆவன செய்து வருகிறது என் றார்.