tamilnadu

img

உமர் அப்துல்லாவுக்கு தமிழக முதல்வர் வாழ்த்து

ஸ்ரீநகர்,அக்.16- ஜம்மு-காஷ்மீர் முதல்வராக பதவி யேற்ற உமர்அப்துல்லாவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 10 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற ஜம்மு - காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி அபார வெற்றி பெற்றது. ஃபரூக் அப்துல்லா தலைமை யிலான தேசிய மாநாட்டு கட்சி 42 இடங்களையும், காங் கிரஸ் கட்சி 6 இடங்களையும் வென்றது.   இந்நிலையில்  ஜம்மு - காஷ்மீர் முதல்வ ராக தேசிய மாநாட்டு கட்சி துணைத்தலை வர் உமர் அப்துல்லா அக்டோபர் 16 அன்று பதவியேற்றார். இது குறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், “ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள உமர் அப்துல்லா அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்! ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா பதவியேற்பு நிகழ்ச்சிக்கு எனக்கு அழைப்பு விடுத்திருந்த போதிலும், தமிழ்நாட்டில் பெய்துவரும் கனமழையின் காரணமாகக் கண்காணிப்பு மற்றும் நிவாரணப் பணி களில் ஈடுபட வேண்டியுள்ளதால், கழக நாடாளுமன்றக் குழுத் தலைவரான கனி மொழியை என் சார்பாகவும், கழகத்தின் சார்பாகவும் வாழ்த்துகளைத் தெரிவிக்க அனுப்பி வைத்தேன். இந்தியத் துணைக் கண்டத்தின் தென் முனையில் உள்ள தமிழ்நாடும் வடமுனை யில் உள்ள ஜம்மு- காஷ்மீரமும் உரக்கக் குரலெழுப்பும் மாநில உரிமைகளை வென் றெடுக்கும் ஜனநாயகப் போராட்டத்தில் இணைந்து பயணிப்போம்! வெற்றி காண்போம்!” என்று பதிவிட்டுள்ளார்.