tamilnadu

img

ஓய்வு பெற்ற நீதிபதி எம்.எஸ். ஜனார்த்தனம் மறைவுக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி புகழ் அஞ்சலி

ஓய்வு பெற்ற நீதிபதி  எம்.எஸ். ஜனார்த்தனம் மறைவுக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி புகழ் அஞ்சலி

சென்னை, ஜூன் 6 -  ஓய்வு பெற்ற நீதிபதி எம்.எஸ். ஜனார்த்தனம் அவர்கள்  வயது முதிர்வின் காரணமாக இயற்கை எய்தியுள்ளார். இதனையொட்டி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தனது புகழ் அஞ்சலியைத் தெரிவித்துள்ளது.  சமூக நீதிப் பயணத்தின் முன்னோடி இது குறித்து முன்னணியின் மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு மற்றும் பொதுச் செயலாளர் கே.சாமு வேல்ராஜ் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தமிழ்நாட்டின் சமூக நீதிப் பயணத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்தவர் எம்.எஸ்.  ஜனார்த்தனம் அவர்கள். தனது பணிக்காலத்தில் மட்டு மல்ல, பணி ஓய்வுக் காலத்திலும் சிறந்த பங்களிப்புகளை வழங்கியவர் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ஒதுக்கீட்டின் சட்டவடிவ நிர்ணயம் தலித் அருந்ததியர் சமூகப் பிரிவினர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கை யை ஆதரித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தின.  இக்கோரிக்கை அரசியல் அரங்கின் மையத்திற்கு நகர்ந்ததன் விளைவாக, அப்போதைய முதலமைச்சர் கலைஞர் அவர்கள் இக்கோரிக்கையை ஏற்று, அதற்கு  சட்டவடிவம் தருவதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி எம்.எஸ்.ஜனார்த்தனம் தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை அமைத்தார். ஆணையத்தின் சிறப்பான பங்களிப்பு ஆணையத்தின் சிறப்பான அறிக்கையே உள்ஒதுக்கீட்டின் நியாயங்களைப் பறைசாற்றும் ஆவண மாக எடுத்தாளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவராக செயல்பட்ட தருணத்தில் அவர் தயாரித்து அளித்த அறிக்கையும் சிறப்பானதாகும். அசைக்க முடியாத தரவுகளுடன் கூடிய இத்தகைய அறிக்கைகள் அவரது அயராத உழைப்பிற்குச் சான்றாகும். முன்னணியின் இரங்கல் இத்தகைய குறிப்பிடத்தக்க பங்களிப்புகள் வழங்கிய ஓய்வு பெற்ற நீதிபதி எம்.எஸ். ஜனார்த்தனம் அவர்களின் மறைவுக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தனது அஞ்சலியையும், அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொண்டுள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.