சென்னை, அக்.16- ஒன்றிய அரசின் மின்சார திருத்த மசோ தாவை திரும்ப பெறுமாறு ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடந்த மாநில எரிசக்தி துறை அமைச்சர்கள் மாநாட்டில், தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வலியுறுத்தினார். ஒன்றிய அரசு சார்பில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் எரிசக்தி துறை அமைச்சர்கள் மாநாடு ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் சனிக்கிழமையன்று நடந்தது. மத்திய எரிசக்தி துறை அமைச்சர் ஆர்.கே.சிங் தலைமை வகித்தார். இதில், தமிழகஅரசு சார்பில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, எரிசக்தி துறை முதன்மை செயலர் ரமேஷ்சந்த் மீனா, மின்வாரி யத் தலைவர் ராஜேஷ் லக்கானி ஆகியோர் பங்கே ற்றனர்.
மாநாட்டில் அமைச்சர் செந்தில்பாலாஜி பேசிய தாவது: மின்சார (திருத்தம்) மசோதா 2022-ஐ திரும்ப பெற வலியுறுத்தி பிரதமருக்கு தமிழக முதல்வர் கடந்த 2021-ம் ஆண்டு கடிதம் எழுதினார். திருவனந்தபுரத்தில் நடந்த தென்மண்டல கவுன்சில் கூட்டத்திலும், இச்சட்டத்தை திரும்ப பெறுமாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் தமிழக முதல்வர் வலியுறுத்தினார். எனவே, மின்சார (திருத்தம்) மசோதா 2022-ஐ திரும்பபெற வேண்டும் குறைந்த விலையில் மின்சாரத்தை தொடர்ந்து வழங்க மாநில அரசுகளுக்கு சொந்தமான மின்பகிர்மான நிறு வனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட வேண்டும். எதிர்கால மின்தேவையை கருத்தில் கொண்டு, வடசென்னை அனல்மின் திட்டம் நிலை-3, எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல அனல்மின் திட்டம், உடன்குடி விரிவாக்க நிலை-1 உள்ளிட்ட 8,340 மெகாவாட் திறனில் பல்வேறு மின்திட்டங்களை தமிழக மின்வாரியம் நிறுவி வருகிறது. தற்போது மின்உற்பத்திக்காக தால்சர் சுரங்கத்தில் இருந்து 14 ரேக்குகள் நிலக்கரி மட்டுமே தமிழக மின்வாரியத்துக்கு அனுப் பப்படுகிறது. எனவே,கூடுதல் ரேக்குகளை வழங்க ரயில்வே துறைக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்த வேண்டும்.
நிலக்கரி விநியோகத்தை மேம்படுத்துமாறு அனைத்து நிலக்கரி நிறுவனங்களையும் ஒன்றிய அரசு வலியுறுத்த வேண்டும் என்பதுடன், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் உற்பத்தித் தேவையை பூர்த்தி செய்ய சுரங்கங்களில் இருந்து நிலக்கரியை தடையின்றி அனுப்புவதற்கு தேவையான ரேக்குகளை வழங்கவும் ரயில்வே துறைக்கு உத்தரவுகளை வழங்க வேண்டும் என ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைப்பட்டுள்ளது.
மீனவர்களின் அச்சத்தை போக்குக
தமிழகத்தை ஒட்டிய கடற்கரையில் 100மீட்டர் உயரத்தில் 31 ஜிகாவாட் காற்று வளம் உள்ளது. கடலோர காற்று மின் திட்டத்தின் கொள்ளளவு பயன்பாட்டு காரணி (ஊருகு) 40விழுக்காடு முதல் 50 விழுக்காடு வரை மாறுபடும். கடலுக்குள் காற்றாலை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த மீனவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மீன வர்கள் மனதில் உள்ள அச்சத்தை போக்கவும் தேவையான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு எடுக்க வேண்டும். ராய்கர் – புகளூர்- திருச்சூர் உயர் அழுத்த நேர்திசை மின் தொடரமைப்பை மிகவும் இன்றி யமையாத மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த தாக அறிவித்து தொடரமைப்பு கட்டணத்தை தேசிய அளவிலான அனைத்து பயனீட்டா ளர்களுக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.