சு. வெங்கடேசன் எம்.பி. கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பதில்
புதுதில்லி, டிச. 12 - மகாத்மா காந்தி ஊரக வேலை யுறுதித் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியில் ரூ. 261 கோடியே 85 லட்சத்தை ஒன்றிய அரசு தராமல் பாக்கி வைத்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன், இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு, ஒன்றிய அரசின் கிராமப்புற மேம்பாட்டு அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதியிடம் (கேள்வி எண் 427/05.12.2023 வாயிலாக) கேள்வி எழுப்பியிருந்தார். “தமிழ்நாடு அரசுக்கு, மகாத்மா காந்தி ஊரக வேலைத் திட்டத்தின் கூலி பாக்கியாக ஒன்றிய அரசு தர வேண்டிய தொகை எவ்வளவு; ஒன்றிய அர சின் நிதி மாநிலங்களுக்கு விடுவிக்கப் படுவதற்கான கால இடைவெளி என்ன; இவ்வாறு தாமதமாக நிதியை விடுவிப்பது, இந்த வேலைத் திட்டத்தை நோக்கி வரும் கிராமப்புற உழைப்பாளிகளின் ஊக்கத்தைப் பாதிக்காதா?”
என்று சு. வெங்கடேசன் எம்.பி. கேட்டிருந்தார். இதற்குப் பதில் அளித்துள்ள ஒன்றிய அமைச்சர், “நவம்பர் 29, 2023 அன்றைய கணக்கின்படி கூலிக்கான ஒன்றிய அரசின் நிதிப் பாக்கி ரூ. 261.85 கோடி” என தெரிவித்துள்ளார். எனினும், இத்தகைய நிதி அளிப்பில் உள்ள கால இடைவெளி பற்றி தெளி வான பதில் தரவில்லை. மாறாக, ஆண்டுக்கு இரண்டு முறை, முறைக்கு ஒன்றோ இரண்டோ தவணைகளில் நிதி அளிப்பு இருக்கும் என்பதாக தெரிவித்துள்ளார். அத்துடன், நிதி அளிப்பில் உள்ள இடைவெளி கிராமப்புற உழைப் பாளிகளின் ஊக்கத்தைப் பாதிக்காதா என்ற கேள்விக்கு பதில் சொல்லாமல் அமைச்சர் கடந்து சென்றுள்ளார். ஆனால், இத்தகைய நிதி வரத்தில் உள்ள தாமதம், வேலை கோரல்களில் சரிவை உருவாக்கி உள்ளது என்று நிறைய செய்திகளும் தரவுகளும் வந்திருக்கும் நிலையில், தமிழ்நாட்டிற்கான நிதிப் பாக்கி உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பிலும் கோரிக் கைகள் எழுந்துள்ளன என்பது குறிப் பிடத்தக்கது.