tamilnadu

img

மனிதக்கழிவை மனிதர் சுமக்கும் இழிவுக்கு முடிவுகட்டும் எண்ணம் ஒன்றிய அரசுக்கு இல்லை!

புதுதில்லி, ஜூலை 25 - மனிதக்கழிவை மனிதர் சுமக்கும் இழிவுக்கு முடிவுகட்டும் வகையில் இயந்திரமயமாக்கலுக்கான சட்டத் திருத்தத்தைக் கொண்டுவரும் யோச னை எதுவும் இல்லை என்று ஒன்றிய அரசு பதிலளித்து இருப்பதாகவும், இது மிகுந்த அதிர்ச்சியளிப்பதாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன்  தெரிவித்துள்ளார். இதுகுறித்து சு. வெங்கடேசன் எம்.பி. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு: “’மனிதக் கழிவை மனிதர் அகற்று தல் தடை மற்றும் மறுவாழ்வு சட்டத்  திருத்த வரைவு 2020 என்ன நிலைமை யில் உள்ளது?’ என நாடாளுமன்றத் தில் கேள்வி  (எண் 694/ 27.05.2023) எழுப்பியிருந்தேன். அதற்கு சமூக நீதி  -அதிகாரமளித்தல் துறை இணைய மைச்சர் ராம்தாஸ் அத்வாலே அளித்து ள்ள பதில் அதிர்ச்சி அளிக்கிறது.  மனிதக் கழிவை மனிதர் அகற்றுதல் தடை மற்றும் மறுவாழ்வு சட்டத்  திருத்த வரைவு 2013-க்கு திருத்தம் செய்யும் எண்ணம் எதுவும் அரசின் வசம்  இல்லை என்று அவர் கூறியுள்ளார். 

முழுமையான இயந்திரமயத்தை உறுதிசெய்ய சட்டத்தை பலப்படுத்துக! 

‘மனிதக் கழிவை மனிதர் அகற்றுதல் தடை மற்றும் மறுவாழ்வு சட்டத் திருத்த சட்ட வரைவு- 2020’ என்பது, கழிவு  அகற்றுவதை முழுமையாக இயந்திர மயம் ஆக்குவதே நோக்கம் கொண்டது என்றே தகவல்கள் தரப் பட்டு இருந்தன. இத்தகைய சட்டம் துப்புரவுப் பொறியியலை மேம் படுத்துவது, பல்கலைக்கழகங்களில் சிறப்புத் துறைகள் உருவாக்குவது ஆகிய முன்முயற்சிகளுக்கு உதவி செய்யக்கூடும்; மேலும் 2013 சட்டத்தை  வலுப்படுத்துவதற்கான வழி வகை களையும் செய்ய இயலும். ஆனால் அமைச்சரின் பதில் அரசாங்கத்தின் அரசியல் உறுதி மீது பெரும் ஐயத்தை உருவாக்குவதாக உள்ளது.  ஆகவே, மனிதக் கழிவை மனிதர் அகற்றுதல் தடை மற்றும் மறுவாழ்வு சட்டத் திருத்த வரைவு-2020 இன் உள்ள டக்கத்தை பொதுவெளியில் சுற்றுக்கு விட்டு கருத்துக்களைப் பெற்று, முழு மையான இயந்திர மயத்தை உறுதி செய்ய வேண்டும். 2013 சட்டத்தை  பலப்படுத்த வேண்டும். இல்லை யெனில் மனிதக் கழிவை மனிதரே அகற்றும் கொடுமையை ஒழிக்க முடி யாது, மனித உயிர்கள் பறி போவதை தடுத்து நிறுத்தவும் முடியாது.” இவ்வாறு சு. வெங்கடேசன் எம்.பி.  தெரிவித்துள்ளார்.