திருச்சியில் நடைபெற்ற சர்வதேச சிலம்ப போட்டியில் பரிசுகள் பெற்ற மதுரையை சேர்ந்த பள்ளி மாணவர்களை, சு.வெங்கடேசன் எம்.பி நேரில் அழைத்து பாராட்டினார்.
இந்தியா, இலங்கை, கத்தார், மலேசியா, சிங்கப்பூர் நாடுகள் கலந்து கொண்ட சர்வதேச சிலம்ப போட்டி திருச்சியில் நடைபெற்றது. இதில் 5 வயது முதல் 10 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் தனித்திறமை போட்டியில் முதல் பரிசு பெற்ற ஜே.பி.சர்வின், ஒற்றைக்கம்பு பிரிவில் இரண்டாம் பரிசு பெற்ற எம்.கர்ஷிதா, ஒற்றைக் கம்பு பிரிவில் மூன்றாம் பரிசு பெற்ற எம்.சான்ஷிதா மற்றும் அவர்களது சிலம்பம் பயிற்சி ஆசான் ராமகிருஷ்ணன் ஆகியோருக்கு பாராட்டுகளை அவர் தெரிவித்தார்.
பள்ளி முதல்வர் ஆறுமுகம், இணை ஒருங்கிணைப்பாளர் ஷியாமளா, மதுரை விராட்டிபத்து ஸ்ரீ மாருதி சிலம்ப பயிற்சி பள்ளி நிறுவனர் ஆசான் ராமகிருஷ்ணன் மற்றும் சேது லட்சுமி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் மா. கணேசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அ. ரமேஷ், மாவட்ட குழு உறுப்பினர்கள் கே. அலாவுதீன் மாநகராட்சி 23 வது வார்டு மாமன்ற உறுப்பினர் டி. குமரவேல் வடக்கு - 1ஆம் பகுதி குழுச் செயலாளர் வி. கோட்டைச்சாமி முன்னாள் மாமன்ற உறுப்பினர் க. திலகர் , மாணவர் சங்க நிர்வாகிகள் டேவிட், டீலன் ஆகியோர் உடன் இருந்தனர்.