தஞ்சாவூர், மே 3- பொதுதேர்வில் வாங்கும் மார்க் குறைவாக இருந்தா லும், அதிகமாக இருந்தா லும், உங்களுக்கான தனி திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரி வித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறு கையில், ‘‘மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும். பொதுதேர்வில் வாங்கும் மார்க் குறை வாகவோ, அதிகமாக இருந்தாலும், உங்களுக்கான தனி திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். பொதுத்தேர்வு முடிவுகள் வரும் நாளில், மாண வர்களை வழிநடத்துவதற்காக பயிற்சிகள் ஆசிரி யர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர்கள் உயர்கல்வியை தொடர, ஆசிரியர்கள் வழிகாட்டும் ஒவ்வொரு பள்ளியிலும் ஏற்பாடு செய்யபட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வுக்கு ஆர்வம் காட்ட வில்லை என்ற தகவல் வெளியானது. இது தொடர்பாக, அதிகாரிகளிடம் விளக்கம் கேட்ட போது, அவர்கள் அறித்த அறிக்கையில், அரசு பள்ளி மாண வர்கள் நீட் எழுதுபவர்களின் எண்ணிக்கை குறையவில்லை எனத் தெரிவித்தார்.