tamilnadu

img

பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து மாணவிகள் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், ஜூலை10- பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக தொடர்ந்து நிகழும் குடும்ப வன்முறைகள் மற்றும் பாலியல் வன்கொடுமைகளை கண் டித்தும், பாலியல் சமத்துவ கல்வியை பாடத் திட்டமாக்க வலியுறுத்தியும், சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் நீக்கப்பட்டுள்ள குடியாட்சி, மத சார்பின்மை சம்பந்தமான பாடப் பகுதிகளை இணைத்து வலியுறுத்தியும் இந்திய மாண வர் சங்க குமரிமாவட்ட மாணவிகள் உபகுழு வின் சார்பில் அழகியமண்டபம் சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு, மாணவிகள் உபக் குழு ஒருங்கிணைப்பாளர் அபிநயசுந்தரி தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் காவியா, மாணவர் சங்க மாவட்ட தலைவர் பதில் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.