சென்னை, ஜன. 9 - ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை பயிலும் சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பல்வேறு கல்வி உதவித் தொகைகளை ஒன்றிய அரசு நிறுத்தி உள்ளது. இதனை கண்டித்து திங்களன்று (ஜன.9) நாடு முழுவதும் போராட்டம் நடத்த இந்திய மாணவர் சங்கம் அழைப்பு விடுத்தது. சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செய லாளர் க.நிருபன் சக்ரவர்த்தி தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்தியகுழு உறுப்பினர் எஸ்.மிருதுலா, சென்னை மாவட்ட நிர்வாகிகள் எஸ். ஆனந்த் குமார், ரா.பாரதி (தென் சென்னை), அருண் (மத்திய சென்னை) உள்ளிட்டோர் பேசினர். மதுரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநிலத் தலைவர் கோ.அரவிந்த்சாமி, மத்தியக்குழு உறுப்பினர் கா.பிருந்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.