tamilnadu

அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் திறன்களை மேம்படுத்த வேண்டும்

அரசுப் பள்ளிகளில் மாணவர்களின்  திறன்களை மேம்படுத்த வேண்டும்

ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்

சென்னை, மே 17- அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர் களின் அடிப்படை திறன்களை மேம்படுத்த ஆசி ரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறி வுறுத்தி உள்ளது.  இதுதொடர்பாக தமிழக பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது: தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை தமிழ், ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் மாணவர்களின் அடிப்படைத் திறன்களை மேம்படுத்தும் நோக்கில், ‘திறன்  கள்’ என்ற திட்டத்தினை அரசு உயர்நிலை மற்றும்  மேல்நிலைப் பள்ளிகளில் நடைமுறைப்படுத்தி வருகிறது. மாணவர்களின் அடிப்படை திறன்களில் முன்னேற்றம் காணப்பட்ட போதிலும், தேசிய அளவில் நடைபெறும் என்.ஏ.எஸ்., ஏசி.ஈ.ஆர். போன்ற திறன் அளவீட்டு ஆய்வுகளில் அரசுப்  பள்ளி மாணவர்கள் வகுப்புக்கேற்ற மொழித் திறன்களை அடைவதில் குறைபாடு கொண்டி ருப்பதாக சுட்டிக் காட்டப்படுகிறது.  ஆகவே, மாணவர்களின் ஆங்கில அடிப் படை மொழித் திறன்களை மேம்படுத்தும் வகை யில் ஒரு கூடுதல் முயற்சியானது அவசியமாகி றது. இதன் மூலம் மாணவர்கள் அடிப்படை ஆங்  கில மொழித் திறன்களை எளிதாக பெரும்வகை யில் மாற்றி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றும் மொழிப்பாட ஆசிரியர்கள், குறிப்  பாக ஆங்கில மொழியை கற்பிக்கும் ஆசிரி யர்களில் பலர் தங்களது வகுப்பறை சூழல்,  பணி செய்யும் பகுதியின் சமூக சூழலை கருத்  தில் கொண்டு மாணவர்களின் அடிப்படை மொழித் திறன்களை வளர்க்கும் வகையில் கற்பித்தல் நுட்பங்களை தாங்களே உருவாக்கி  வகுப்பறைகளில் வெற்றிகரமாக செயல்படுத்தி  வருகின்றனர். இவ்வாறான பல சுய முன்னெ டுப்புகள் ஊடகங்களில் காட்சிப்படுத்தப்பட்டு அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் பல ஆசி ரியர்கள் தன்னாார்வத்தோடு கற்பித்தல் வழி முறைகளை உருவாக்குபவர்களாகவும், பிற ஆசி ரியர்களால் உருவாக்கப்பட்ட கற்பித்தல் நுட்பங் களை தங்களது வகுப்பறை சூழலுக்கு ஏற்ப பயன்படுத்துபவராகவும் உள்ளபோதிலும் இவ்வாறான முயற்சிகள், அவ்வாசிரியர்கள் பணியாற்றக்கூடிய சில பள்ளிகளுக்கு மட்டுமே  பயன்படுகிறது. இத்தகைய சிறப்பான செயல்  பாடுகள், அனைத்து அரசுப் பள்ளி மாண வர்களுக்கும் கிடைக்கும்படி செய்திட வேண்டி யது அவசியமாகிறது. பல மாவட்டங்களில் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் ஆசிரியர்களின் தனிப்பட்ட முயற்சிகளை, அதாவது, அவர்களது அணுகு முறைகள், வழிமுறைகள் மற்றும் கற்பித்தல் நுட்பங்களை (Approach, Methodology and  Techniques) ஒருங்கிணைத்து தொகுத்து, அவற்றை மொழி வள வங்கியாக மேம்படுத்தும்  நோக்கில் முன்னெடுப்புகள் மேற்கொள்ளப் பட்டு, இம்மொழி வள வங்கி மூலம் ஆசிரியர்கள் தங்களின் கற்பித்தல் வழிமுறைகளை பிற ருக்கு வழங்கவும் அவற்றைப் பெற விழைவோர் அவற்றினைப் பெற்றிடவும் முடியும். இதன் ஒரு பகுதியாக, மாணவர்களின் மொழித் திறன்களை மேம்படுத்தும் ஒரு புதிய  முன்னெடுப்பாக “Level Up” என்ற தன்னார்வ  திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இத்திட்டத் தின் முதன்மை நோக்கமானது, அரசுப் பள்ளி களில் குறிப்பாக ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை யிலான மாணவர்களின் ஆங்கில மொழி வாசித்  தல், பேசுதல் மற்றும் எழுதுதல் ஆகிய அடிப்ப டைத் திறன்களை மாணவர்கள் எளிதாக கற்றுக்  கொள்ளும் வகையில் ஏற்கெனவே ஆசிரியர்  களால் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப் பட்டு வருகிற செயல்பாடுகளை கொண்ட “மொழி  வள வங்கி” ஒன்றை உருவாக்குவதாகும். ஒவ்வொரு மாவட்டத்திலும் இவ்வகையான முயற்சிகளை வெற்றிகரமாக மேற்கொண்டு வரும் ஆசிரியர்களை கொண்ட ஒரு புலனக் குழு (WhatsApp group) (வாட்ஸ் ஆப் குரூப்) தோற்றுவிக்கப்பட்டுள்ளது. 2025 – 2026 ஆம் கல்வியாண்டில், ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை உள்ள ஏழு மாத காலத்திற்கு, ஒவ்வொரு மாதத்திற்கும் மாணவர்கள் அடைய வேண்டிய குறைந்தபட்ச மொழித் திறன் இலக்குகள் நிர்ணயிக்கப்பட உள்ளன. மாவட்டம் தோறும் (மாவட்டத்திற்கு நான்கு  அல்லது ஐந்து ஆசிரியர்கள் வீதம்) தேர்ந்தெ டுக்கப்பட்டு அவர்கள் “Level Up” (லெவல் அப் )  புலனக்குழுவில் இணைக்கப்பட்டு உள்ள னர். இவ்வாசிரியர்களுக்கான முதல் வழிகாட்டி  இணைய வழிக் கூட்டம் 02.05.2025 அன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை பள்ளிக்  கல்வி இயக்குநர் தலைமையில் நடத்தப்பட் டது. இக்கூட்டத்தில் மாணவர்களின் ஆங்கில  அடிப்படைத் திறன்களை மேம்படுத்துவது குறித்தும், சிறப்பாக தங்களது திறன்வளர்  நுட்பங்களை கையாளும் ஆசிரியர்களின் அனு பவங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. தொடர்ந்து, மாணவர்களின் ஆங்கில அடிப்ப டைத் திறன்கள் அடைவு குறித்த மாதவாரியான இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இதன் பொருட்டு, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் திட்ட  அலுவலர்கள், தங்கள் மாவட்டங்களில் ஆங்கில  மொழி கற்பித்தலில் புதுமையான முயற்சிகள்  மேற்கொண்டு சிறப்பான கற்றல் விளைவுகளை ஏற்படுத்தியுள்ள ஆசிரியர்களை அடையாளம் கண்டு அவர்களது முயற்சிகளை பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கவனத்திற்கு கொணர்ந்து, இந்த “Level Up” (லெவல் அப்)  என்ற தன்னாார்வ செயல்பாட்டு திட்டத்தில் அவ்வாசிரியர்களை இணைக்கும் நடவடிக்கை களை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படு கிறார்கள். மேலும், புலனக்குழுவில் ஆசிரியர்கள் தங்களது கற்பித்தல் வழிமுறைகள் தொடர்  பான பதிவுகளை பகிரும் வகையில் அப்புல னக்குழுவானது அமைக்கப்படும். ஒவ்வொரு மாதமும் பள்ளிக்கல்வி இயக்ககத்தின் நேரடி  கண்காணிப்பில், பள்ளிகளில் “Level Up” (லெவல் அப் ) என்ற தன்னார்வ திட்ட செயலாக்  கத்தினால் மாணவர்கள் பெற்ற அடிப்படை ஆங்கில மொழித்திறன் அடைவு குறித்த ஆய்வு  மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்படு கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.