tamilnadu

மே 29ல் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு துவக்கம்

தூத்துக்குடி, மே 26-கோவில்பட்டி அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு வருகிற 29-ம் தேதி (புதன்கிழமை) தொடங்குகிறது. இதுகுறித்து கோவில்பட்டி அரசு கல்லூரி முதல்வர் தீபாவெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2019-2020-ம் கல்வி ஆண்டிற்கான மாணவ- மாணவிகள் சேர்க்கை கலந்தாய்வு வருகிற 29-ந்தேதி (புதன்கிழமை) தொடங்குகிறது. அன்று காலை 10 மணிக்கு அனைத்து பாடப் பிரிவுகளுக்குமான சிறப்பு ஒதுக்கீட்டில் மாணவ-மாணவிகள் சேர்க்கை நடைபெறும். இதில் முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள், என்.சி.சி., விளையாட்டு பிரிவைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொள்ளலாம். அன்று மதியம் 2 மணிக்கு ஆங்கில பாடப்பிரிவிற்கான கலந்தாய்வு நடக் கிறது. 30-ம் தேதி (வியாழக்கிழமை) காலை10 மணிக்கு தமிழ் பாடப்பிரிவுக்கும் மதியம் 2 மணிக்கு வணிகவியல் பாடப்பிரிவுக்கும் கலந்தாய்வு நடக்கிறது. 31-ம் தேதி(வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு வரலாறு பாடப்பிரிவுக்கும் மதியம் 2 மணிக்கு கணினி அறிவியல், புவி அமைப்பியல் ஆகிய பாடப் பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெறும்என அறிவிக்கப்பட்டுள்ளது.