tamilnadu

img

மாநிலச் செயலாளரான பத்திரிகை ஆசிரியர் அனில் பிஸ்வாஸ்

மாநிலச் செயலாளரான பத்திரிகை ஆசிரியர் அனில் பிஸ்வாஸ்

தோழர் அனில் பிஸ்வாஸ் நாடியா மாவட்டத்தில் ஒரு ஏழைக் குடும்பத்தில் 1944ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2ஆம் தேதி பிறந்தார். மேற்கு வங்கத்தின் இரண்டாம் தலை முறை தலைவர்க ளில் மிகச்சிறந்தவர் அனில் பிஸ்வாஸ் என கூறினால் மிகை அல்ல. மார்க்சிய-லெனினிய சித்தாந் தத்தில் ஆழமான பிடிப்பும் மிகச்சிறந்த தொலைநோக்கு பார்வையும் கொண்ட மிக திறமையான கட்சி அமைப்பாள ராகவும் அனில் பிஸ்வாஸ் பரிண மித்தார். 1965ஆம் ஆண்டு கட்சியில் இணைந்து முழுநேர ஊழியராக பணியாற்றிய அவர் தொடக்கத்தில் கட்சி பத்திரிகையான கணசக்தியில் நிருபராக இணைந்தார். 1978ஆம் ஆண்டு மாநி லக் குழுவிற்கும் 1982ஆம் ஆண்டு மாநில செயற்குழுவுக்கும் தேர்வு செய் யப்பட்டார். 1983 முதல் 1998 வரை  கணசக்தியின் ஆசிரியராக பணியாற்றி னார். இவர் காலத்தில்தான் கணசக்தி மேற்கு வங்கத்தின் மிக முக்கிய பத்திரி கையாக பரிணமித்தது. முதலாளித்து வப் பத்திரிகைகள் பொறாமை கொள்ளும் அளவுக்கு எண்ணிக்கை தரம் இரண்டிலும் சாதனைகளை கணசக்தி படைத்தது. 1998ஆம் ஆண்டு மாநிலக் குழு செயலாளராக அனில் பிஸ்வாஸ் தேர்வு செய்யப்பட்டார். அவர் தலைமையின் கீழ் கட்சி மேலும் ஆழமான வலுவான அரசியல் சக்தியாக உருவெடுத்தது. கட்சி யின் அனைத்து மட்ட ஊழியர்களின் நன் மதிப்பை பெற்ற தலைவராக அனில் பிஸ்வாஸ் விளங்கினார். 1985ஆம் ஆண்டு மத்தியக் குழு வுக்கும் 1998ஆம் ஆண்டு அரசியல் தலைமைக் குழுவுக்கும் தேர்வு செய்யப்பட்டார். கட்சித் திட்டம் காலமயப் படுத்தப்பட்டதிலும் கட்சியின் வரலாறு பற்றிய ஆவணங்களை வெளிக் கொண்டு வருவதிலும் அவர் மிகுந்த அக்கறையையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தினார். மிகவும் எளிமை யான வாழ்வுக்கு சொந்தக்காரரான அனில்பிஸ்வாஸ் 2006ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26ஆம் நாள் தனது 62 ஆவது வயதில் காலமானார். 

மாணவ செயல்பாட்டாளர், மார்க்சிய சித்தாந்த அறிஞர் நிருபம் சென்

சிபிஎம் அரசியல் தலைமைக் குழு உறுப்பினராக தேர்வு செய்யப் பட்ட தோழர் நிருபம் சென் அவர்கள் 1946ஆம் ஆண்டு அக்டோபர் 8ஆம் தேதி பிறந் தார். மாணவர் அமைப்பு செயற் பாட்டாளராக பொது வாழ்வில் காலடி வைத்தார். 1964 ஆம் ஆண்டு கட்சியில் சேர்ந்தார். பர்துவான் மாவட்டத்தில் ஏராளமான தொழிலாளர் மற்றும் விவசாயி போராட் டங்களை வழி நடத்தினார். 1970களில் அவர் மீது பல பொய் வழக்குகள் போ டப்பட்டதால் தலைமறைவு வாழ்வை மேற்கொள்ள வேண்டிய தேவை உருவானது.  1968ஆம் ஆண்டு அவர் கட்சி யில் முழுநேர ஊழியராக ஆனார். பர்துவான் மாவட்டச் செயலாளராக 1989 முதல் 1995 வரை திறமையாகச் செயல்பட்டார்.  இந்த காலகட்டத்தில் கட்சி பர்துவான் மாவட்டத்தில் சிறப்பான வளர்ச்சியை கண்டது. மார்க்சிய சித்தா ந்தத்தை மிக எளிதாக உழைக்கும் மக்களுக்கு எடுத்துரைப்பதில் வல்லவ ரான நிருபம் சென் மார்க்சிய சித் தாந்தத்தை விளக்கி ஏராளமான கட்டுரைகளை எழுதியுள்ளார். மிகச் சிறந்த பேச்சாளராகவும் மிளிர்ந்தார்.  நிருபம் சென் 1985ஆம் ஆண்டு மேற்கு வங்க மாநிலக் குழுவுக்கும் 1995ஆம் ஆண்டு மாநில செயற்குழு வுக்கும் தேர்வு செய்யப்பட்டார். 1998ஆம் ஆண்டு மத்தியக் குழுவுக் கும் 2008ஆம் ஆண்டு அரசியல் தலைமைக் குழுவுக்கும் தேர்வு செய்யப்பட்டார். 2013ஆம் ஆண்டு மூளையில் அடைப்பு ஏற்பட்டு பாதிப்பு உருவான காலத்திலும் தொ டர்ந்து கட்சிப் பணிகள் செய்தார். உடல் நிலை காரணமாக 2015 முதல் 2018 வரை மத்தியக் குழு சிறப்பு அழைப்பா ளராக இருந்தார். மூன்று முறை சட்ட மன்றத்துக்கு தேர்வான அவர்  இடது முன்னணி ஆட்சியில் 10 ஆண்டுகள் தொழில் அமைச்சராக செயல்பட்டார். மேற்கு வங்கத்தை தொழில் பாதையில் இட்டுச் செல்ல பல முயற்சிகளை எடுத் தார். சுய உதவி குழுக்கள் சிறப்பாகச் செயல்பட கூடுதல் கவனம் செலுத்தி னார். மார்க்சிய சித்தாந்தத்தில் அர்ப்ப ணிப்புடன் செயல்பட்ட அவர் தனது 72ஆவது வயதில் 2018ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் நாளில் காலமானார்.