tamilnadu

img

மாற்றுத் திறனாளிகளை மாவட்ட ஆட்சியர்களிடம் ஒப்படைக்கும் போராட்டம்... எதற்காக? - தோ.வில்சன்

மாற்றுத் திறனாளிகளுள் பெரும்பாலானோரும் வேறு வாழ்வாதாரம் எதுவுமின்றி சமூகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே வாழ்ந்து வருகின்றனர். இவர்களது வாழ்வா தாரத்திற்காக பல மாநில அரசுகள் ஒரு குறைந்தபட்சத் தொகையை அவர்களுக்கு மாத உதவித்தொகையாக வழங்கி வரு கின்றன. அந்த வகையில் நமது அண்டை மாநிலங்களான புதுச்சேரி மற்றும் கர்நாட காவில் ரூபாய் மூவாயிரமும், தெலுங்கானா வில் ரூபாய் நான்காயிரமும், ஆந்திராவில் சாதாரண ஊனமுற்றோருக்கு ரூபாய் ஆறா யிரமும், தவழ்ந்து செல்லும் மாற்றுத்திற னாளிகளுக்கு ரூபாய் பத்தாயிரமும், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு நடமாட இயலாத மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் பதினைந்தாயிரமும் மாத உதவித் தொகையாக வழங்கப்படுகிறது. 

தமிழகத்தில் உதவித்தொகை பெறுவோர்

நமது தமிழ்நாட்டில் எழுபத்தைந்து விழுக்காடுக்கு குறைவான ஊனம் உடைய சுமார் 5.5 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசின் வருவாய்த்துறை மூலமாக ரூபாய் ஆயிரத்து ஐநூறும், அதற்கு மேல் ஊனமுடைய கடும் ஊனமுற்ற சுமார் 2 லட்சம் பேருக்கு ரூபாய் இரண்டாயிரமும் மாத உதவித் தொகையாக வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் இவ்விரண்டு துறைகள் மூலமாகவும் சுமார் 7.5 லட்சம் மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை பெற்று வருகின்றனர். அண்டை மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகள் குறைந்த அளவு உதவித் தொகையையே பெறுகின்றனர். தொடர் வேண்டுகோள் இந்நிலையில் தமிழக அரசால் வழங்கப்படு கிற இந்த உதவித் தொகையைப் பெறுவதற்காக கடந்த 2023 ஏப்ரல் மாதம் முதல் தமிழ்நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான மாற்றுத்திற னாளிகள் புதிதாக விண்ணப்பித்து உதவித்தொகை கிடைக்கப் பெறாமல் காத்து இருக்கின்றனர். எனவே, உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்து ஓராண்டிற்கும் மேலாக  காத்திருக்கும் அனைத்து மாற்றுத் திறனாளி களுக்கும் உடனடியாக உதவித் தொகை வழங்கிட வேண்டும் என்று  தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

போராட்டம் ஒத்திவைப்பு

இந்தப் பின்னணியில், உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்து காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளை அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கும் போராட்டம் பிப்ரவரி 20 அன்று நடத்திட முடிவு செய்யப்பட்டது. இதனையறிந்து தமிழக சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் துறை செயலாளர் நாகராஜன் மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை ஆணையர் லெட்சுமி ஆகியோர் மாற்றுத் திறனாளிகள் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். அந்த பேச்சுவார்த்தையின் போது, நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் உதவித் தொகை வழங்கலாம் என்று உறுதியளித்து, போராட்டத்தை கைவிடுங்கள் என்று கேட்டுக்  கொண்டதன் அடிப்படையில் 20.02.24 அன்று  நடத்தப்படுவதாக இருந்த போராட்டத்தை கைவிட்டோம். மீண்டும் போராட்ட முடிவு தற்போது நாடாளுமன்றத் தேர்தலும் முடிந்து, சட்டமன்ற கூட்டத் தொடரும் முடி வுற்ற நிலையில், காத்திருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கு வதற்கான நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளா தது மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. எனவே, விண்ணப்பித்து கடந்த ஓராண்டிற்கும் மேலாக காத்திருக்கும் மாற்றுத் திறனாளிகளை  அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் ஒப்படைக்கும் போராட்டம் ஜூலை 16 அன்று நடத்திட முடிவு செய்யப்பட்டு, அதற்கான தயாரிப்புப் பணிகள் மாநிலம் முழுவதும் முழுவீச்சுடன் நடைபெற்றுள்ளது. 

பேச்சுவார்த்தை 

இதனிடையே இந்த போராட்டம் பற்றி த மிழக அரசின் கவனத்திற்கு சென்றமையால் 12.07.24 அன்று சங்க நிர்வாகிகளிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் துறை செயலாளர் சி.இ.தாமஸ், உதவித் தொகை கேட்டு விண்ணப்பித்து காத்திருப்போர் பற்றிய விபரம் சம்பந்தமாக பேசிய போது, அரசுத் தரவுகளின் படி வெறும் மூவாயிரம் பேர் மட்டுமே மாநிலம் முழுவதும் உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்து காத்திருப்பதாக உண்மைக்கு புறம்பான ஒரு தகவலை முன் வைத்தார்கள்.

அரசுக்கு தவறான தகவல் 

இதனிடையே பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட சங்க நிர்வாகிகள் தங்கள் சொந்த மாவட்டங்களான செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், திண்டுக்கல், தர்மபுரி ஆகிய ஒவ்வொரு மாவட்டங்களில் மட்டுமே ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்டோர் முதல்  மூவாயிரம் பேர் வரை உதவித்தொகை கிடைக்காமல் காத்திருப்பதாகவும், இதனை மேற்கூறிய மாவட்ட ஆட்சியர்களிடமே கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்பதையும் சுட்டிக்காட்டினர். அந்த வகையில் மாநிலம் முழுவதும் ஒரு பெரும் எண்ணிக்கையிலான மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை கேட்டு காத்திருப்பதாகவும் கூறினர். இரு தரப்பினரும் முன் வைத்த தரவுகளின் படி மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தமிழக அரசிடம், குறிப்பாக, மாற்றுத்திறனாளிகள் துறைக்கு பொறுப்பான முதலமைச்சரிடம் உண்மையை மறைப்பதற்காகவே அதிகாரிகள் இவ்வாறு செய்வதாக தெரிகிறது. சமூகப் பாதுகாப்பு உதவித்தொகைக்கு 2023 ஜூன் மாதம் முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த e.dist இணையதள முகவரியையும், அதோடு இணைக்கப்பட்ட OAP back office இணையதள முகவரியையும் பொதுவெளியில் யாரும் பார்வையிடாதவாறு வருவாய் நிர்வாக ஆணையர் மட்டத்தில் லாக் (lock) செய்து வைத்துள்ளதும் தெரிய வருகிறது. எனவே பெரும்பாலும் இது சம்பந்தப்பட்ட அந்தந்த வட்டாட்சியர் மட்டத்தில் தான் இதுவரை எத்தனை பேர் விண்ணப்பித்து காத்திருக்கின்றனர் என்ற தரவுகள் இருக்க வாய்ப்பு உள்ளது; அல்லது இந்த இணையதள முகவரி மீதான லாக்கை எடுத்துவிட்டால் மாநிலம் முழுவதும் புதிதாக உதவித்தொகை கேட்டு எத்தனை பேர் விண்ணப்பித்து உள்ளனர் என்பது தெரியவரும். தற்போது அதிகாரிகள் தரப்பில் கூறப்படும் மூவாயிரம் பேர் என்பது, லாக் செய்யப்படுவதற்கு முந்தைய 2023 ஏப்ரல் முதல் ஜூன் முடிய மூன்று மாதம் உள்ள எண்ணிக்கையாகவே இருக்கக் கூடும்.

100 நாள் வேலைத்திட்டத்தில்வேலை

இந்தியாவில் மாற்றுத்திறனாளிகள் உள்ளடக்கிய குடும்பத்தினரை வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்களாக கணக்கிட்டு அவர்கள் அனைவரது குடும்ப அட்டை களையும் AAY குடும்ப அட்டைகளாக மாற்றி அவர்களுக்கு ‘அந்த்யோதயா அன்ன யோஜனா’ திட்டத்தின் கீழ் 35 கிலோ இலவச உணவு தானியங்கள் வழங்கிட வேண்டும் என்ற தில்லி உயர்நீதிமன்ற வழிகாட்டுதலை பின்பற்றி ஒன்றிய அரசின் மாற்றுத் திறனாளிகள் துறை பிறப்பித்த உத்தரவை அமலாக்க வேண்டும்.  முதல்வர் தலையிட வேண்டும் எனவே தான் உரிய வாழ்வாதாரமின்றி வறுமையில் வாடும் மாற்றுத்திறனாளிகளை அரசே பராமரிக்க வேண்டுமென வலியுறுத்தி 16.07.2024 (இன்று) அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆட்சியரிடம் மாற்றுத்திறனாளி  களை ஒப்படைக்கும் போராட்டம் நடைபெறு கிறது. முதலமைச்சர் அவர்கள் இப்பிரச்சனை யில் தலையிட்டு மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க முன்வர வேண்டும்.